Tuesday 7 May 2013

மாடியில் ........பயணம்.....


 



 " அம்மா  எனக்கு அந்த அங்கிள் தலையில் இருக்கும்  பிஸ்கெட்  வேணும் "    ஒரு சின்னப் பெண் குரல் .
"தலையில் பிஸ்கெட்டா? "
சட்டென்று திரும்பிப் பார்த்தேன்.

பார்த்தால் ரயில்வே  பிளாட்பார்மில்  ஒருவர் பிஸ்கெட் விற்றுக் கொண்டிருந்தார்.

நாங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் பிஸ்கெட் விற்பவர் தலையில் வைத்திருக்கும்  அட்டைபெட்டியில் இருக்கும்  அத்தனை பிஸ்கெட்டும் தெரிந்தது .

உட்கார்ந்திருப்பது மாடி ரயில் அல்லவா? 
அதாங்க  double decker.

முன் சீட் குழ்ந்தை சொன்னது போல்  பிளாட்பார்மில் செல்லும் எல்லோரின் உச்சி மண்டை எல்லாம் தெரிந்தது. 

double decker  ஓட  ஆரம்பித்தாயிற்று என்று டிவியில் பார்த்துடனேயே பிருந்தாவன் எக்ஸ்ப்ரஸில் சென்னை  திரும்ப வேண்டும் என்ற என் எண்ணத்தை  உடனடியாக மாற்றிக் கொண்டு MAS Double Decker இல்  டிக்கெட்டை புக் செய்தேன்.

lower deck, middledeck , upper deck என்று மூன்று  தளங்களாக பிரிக்கப் பட்டிருக்கிறது ரயில் . 
middle  deck  சும்மா பேருக்கு பன்னிரெண்டே  சீட்.

மற்ற இரண்டு தளங்களில் தான்  பெரும்பாலான பயணிகள். 

உயரத்தில் உட்கார்ந்து பயணிப்பது ஒரு புது அனுபவம்  தான்.
நன்றாகவும் இருந்தது. 

" திரிசங்கு சொர்க்கம் " இப்படித்தான் இருந்திருக்குமோ? ஆகாயத்திலும் இல்லை. தரையிலும் இல்லை.

மீண்டும் அந்தக் குழந்தையின் குரல்."அம்மா ஏசி  வேண்டாம் குளிருதே " என்று நச்சரிக்க ஆரம்பித்தாள் .

அவளுக்கு மட்டுமில்லை பெரியவர்களுக்கும் கூடத்தான்.

ஒருமுறை lower deck  போய்  பார்ப்போமே  என்று ஒரு  ரவுண்டு சென்று வந்தேன்.

மாடியில் ஒரே குளிர் என்றால் கீழ் தளத்தில்  புழுக்கம் அதிகம்..

ஆனால் இதெல்லாம்  ஆரம்பகால  சிறு சிறு  சங்கடங்கள். போகப்போக சரிசெய்தி விடுவார்கள்.

ஒரு காலத்தில் toilet  வசதி கூட இல்லாமல் தான் நம் ரயில்  இருந்திருக்கிறது.
உண்மை !நம்புங்கள். !

அதாவது 1909 முன்பு நம்மூர் ரயில்களில்  toilet  வசதி இல்லை.

இதை நான் சொல்லவில்லை. 

டில்லியில் இருக்கும் ரயில்வே மியுசியத்தில்  திரு  Okil  Chandra  Sen  என்பவர் எழுதியிருக்கும் கடிதம் சொல்கிறது. 

அவருடைய கடிதத்திற்கு  அந்த காலத்தில்  மரியாதை  கொடுத்து  கழிவறை  வசதியை பிரிட்டிஷ்  காரர்கள் உடனடியாக செய்து கொடுத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தை எப்படி மிரட்டுகிறார் நீங்களே பாருங்கள்.


ஆங்கில இலக்கணம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை போலும் அவருக்கு. இல்லை,  ரயில்களில்  ஒரு toilet  வசதி செய்து கொடு  முதலில் . அப்புறம் நான் கற்கிறேன் உன்  ஆங்கிலத்தை, என்று நினைத்துக் கொண்டு எழுதியது போல் தெரிகிறது இல்லையா?

இக்கடித்தத்தின் சாராம்சம் என்னவெனில் 

திரு Ohil   அஹமெட்பூர்  ஸ்டேஷனில் Toilet உபயோகிக்க இறங்கியிருக்கிறார். அவர் திரும்ப ஏறுவதற்குள்   ரயில் கிளம்பி விடுகிறது. 
அவசரமாக ஏற  முயலும் போது  அலங்கோலமாக கீழே  விழுந்து ரயிலை தவற  விடுகிறார். 

வந்த ஆத்திரத்தில் ரயில் நிர்வாகத்திற்கு  எழுதப்பட்ட கடிதம் தான் இது.

இக்கடிதத்திற்கு  உடனடியாக பலனும் கிடைத்து விட்டதே !
அதைச் சொல்லுங்கள். 

நம்முடைய அடிப்படைத் தேவையை ஒரு கடிதத்தின் மூலமாகப் பெற்றுத் தந்த  திரு.Okhil  Chandra  Sen  அவர்களுக்கு  நன்றியைக் கூறிக் கொண்டு நம் ரயில்வேத்  துறை  மேன்மேலும் முன்னேறும் என்று நம்புவோம்.

image courtesy ---google


33 comments:

  1. மிகவும் நல்ல பதிவு.

    //திரு Ohil அஹமெட்பூர் ஸ்டேஷனில் Toilet உபயோகிக்க இறங்கியிருக்கிறார். அவர் திரும்ப ஏறுவதற்குள் ரயில் கிளம்பி விடுகிறது.
    அவசரமாக ஏற முயலும் போது அலங்கோலமாக கீழே விழுந்து ரயிலை தவற விடுகிறார்.

    வந்த ஆத்திரத்தில் ரயில் நிர்வாகத்திற்கு எழுதப்பட்ட கடிதம் தான் இது.//

    இதை நான் ஏற்கனவே ஏதோ ஒரு புத்தகத்திலோ செய்தித்தாளிலோ படித்துள்ளேன்.

    உண்மை தான். அவரால் இன்று எல்லோருக்கும் ஓர் வசதி செய்து தரப்ப்ட்டுள்ளது. அவரைப் பாராட்டத்தான் வேண்டும்.

    மாடி இரயில் படமும், பயண அனுபவமும் நல்லா இருக்கு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வைகோ சார், உங்கள் உடனடி வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சார்.

      Delete
  2. மாடி ரயிலில் பயணித்துவிட்டு வந்ததற்கு முதலில் வாழ்த்துக்கள்!
    நாம் நல்ல ஆங்கிலத்தில் நம் குறைகளை எழுதிப் போட்டால் கண்டு கொள்ளது இரயில்வே நிர்வாகம் என்று அந்தக் காலத்தில் - ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் அவர்களது மொழியை கொலை செய்து எழுதிய கடிதத்திற்கு கைமேல் பலன்!

    ReplyDelete
    Replies
    1. அவர் அப்படி எழுதியதனால் தான் உடனே வசதி ஏற்படுத்தப்பட்டு விட்டது. இல்லையென்றால் அவர் இன்னொரு கடிதத்தை எழுதிவிடப்போகிறாரே என்ற பயமோ என்னமோ ?
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ரஞ்சனி.

      Delete
  3. நானும் நேற்று என் புத்திரியை
    டபுள் டெக்கரில் ஏற்றி விடுகிற சாக்கில்
    ட்ரையினில் முழு வலம் வந்தேன்
    நிச்சயம் ஒரு முறை பயணித்து அனுபவிக்கவேண்டும்
    என்கிற ஆவல் மிகுந்தது
    நீங்கள் பதிவுசெய்துள்ள அந்த ஆங்கிலக் கடிதம்
    வெகு சுவாரஸ்யம்.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்.
      நிச்சயம் ஒரு முறை பயணியுங்கள். கொஞ்சம் வித்தியாசமான அனுபவம் தான்.

      Delete
  4. மாடிரயில் பற்றிய அலசல் அருமை.ரயில்வே வசதி செய்து கொடுத்தது அந்த காலம்.இன்று ஆயிரம் கடிதம் கொடுத்தாலும்பயனிகழ்ப் பற்றிக் கவலைப் படாமலிருப்பது நம்ம காலம் என்ன செய்ய

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா , உங்கள் கருத்துக்கும்,வருகைக்கும்.

      Delete
  5. பிரிட்டிஷ் அரசாங்கம் நாட்டை கொள்ளை அடித்தாலும் மக்களின் அடிப்படைதேவைக்கான கோரிக்கை வைக்கப்பட்டதும் செய்து கொடுத்திருக்கிறார்கள் நெபது நீங்கள் வெளியிட்ட கடிதம் மூலம் தெரியமுடிகிறது. ஆனால் இப்போது நம்மை ஆளும் அரசாங்கமும் கொள்ளை அடிக்கிறது ஆனால் அவர்கள் மக்களின் கோரிக்கைகளை செய்து கொடுக்க கூட வேண்டாம் அட்லீஸ் கேட்கவாது கேட்பார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லைதான்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆதங்கம் புரிகிறது.கல்வியறிவும், விழிப்புணர்வும் அதிகரித்ததால் அரசாங்கம் மக்களின் குறைகளைக் கேட்க ஆரம்பித்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

      நன்றி MTG உங்கள் கருத்துக்கு.

      Delete
  6. அட டபுள் டெக்கரில் பயணம் செய்தாயிற்றா.....

    தில்லியிலிருந்து ஜெய்பூர் வரை செல்லும் டபுள் டெக்கரில் பயணம் செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறேன்.... பார்க்கலாம் எப்போது போக முடிகிறதென....

    ReplyDelete
    Replies
    1. ஜெய்புறிற்கு மாடி ரயிலில் பயணித்து, எங்களுக்கு மாதிரில் பற்றியும் pink city பற்றியும் ஒரு பதிவு எழுதுங்கள்.
      நன்றி வெங்கட்ஜி.

      Delete
  7. டபுள் டெக்கர் டிரெயினில் பயணம் செய்து விட்டீர்களா! உள்ளே படமெடுக்க அனுமதி இல்லையா? பிளாட்ஃபார்மில் செல்பவர்கள் உச்சி மண்டை தெரியுமளவு என்றால் எவ்வளவு கீழே இருக்க வேண்டும்! புதிய அனுபவமாகத்தான் இருக்கும்! தலையில் பிஸ்கட்....ஹா ஹா ஹா ! கடிதம் சிரிப்பைத் தந்தது. இந்த ஆங்கிலத்தில் அடுத்த கடிதம் வந்து விடுமோ என்று பயந்தே அந்த வசதியை உடனே செய்து தந்திருப்பார்களோ!!! ஆனாலும் நீங்கள் சொல்வதுபோல நமக்கெல்லாம் ரயிலில் அந்த வசதியைப் பெற்றுத் தந்த கடிதமாயிற்றே...

    ReplyDelete
    Replies
    1. படமெடுக்க யார் சார் அனுமதி கொடுக்க வேண்டும் நம்மவர்களுக்கு.எல்லோருமே க்ளிக்கி தள்ளிக் கொண்டேயிருந்தார்கள். எனக்குத் தோன்றவில்லை படம் எடுக்க.
      நாம் எல்லோருமே திரு Okhil Babu விற்கு நன்றிகடன் பட்டிருக்கிறோம்.
      உண்மையே!
      என் வலைப்பூவிற்கு வந்து கருத்து தந்ததற்கு, நீங்கள் என் நன்றியைப் பிடியுங்கள்.

      Delete

  8. நம்முடைய அடிப்படைத் தேவையை ஒரு கடிதத்தின் மூலமாகப் பெற்றுத் தந்த திரு.Okhil Chandra Sen அவர்களுக்கு நன்றியைக் கூறிக் கொண்டு நம் ரயில்வேத் துறை மேன்மேலும் முன்னேறும் என்று நம்புவோம்.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி, உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.

      Delete


  9. " மொழியைக் கொலை செய்து " என்று படித்த பின்னே தான்

    இதை எழுதுவதா என ஒரு கணம் யோசித்தபின் இதை எழுதுகிறேன்.

    இரு கருத்துக்களைச் சொல்லிட வேண்டும்.

    முதல் கருத்து.

    ஒரு மொழியின் முதல் உபயோகம் எண்ணங்களை வெளிப்படுத்துவதே.
    அந்த மொழியின் எண்ணங்களை எவ்வாறு வெளிப்படுத்தினால் அந்த
    எண்ணங்கள் எவர் காதுகளுக்கு எட்டுமோ அவர் புரிந்துகொள்ளக்கூடிய‌
    வகையில் இருந்தால் போதுமானது.

    மொழி முதலில் தோன்றியதாகவும் அதற்குப்பின்னே அதன் இலக்கணங்கள்
    தோன்றியதாகவும் தான் இருக்கவேண்டும். ஒரு மொழியை முதலில் கற்க வேண்டாம்
    அதன் இலக்கணத்தை கற்றுவிட்டு அது புரிவதாக இருந்தால் மொழியைக் கற்போம் என்ற
    நிலை இல்லை.

    1950 காலங்களில் ஆங்கிலத்தில் ரன் அன்ட் மார்ட்டின் என்று ஒரு இலக்கணப்புத்தகம் உண்டு.
    அது ஒரு பாடப்புத்தகம் போலத்தான் போதிக்கப்பட்டு வந்தது.

    இன்றைய மாணவர்களில் பலருக்கு பார்ட்ஸ் ஆஃப் ஸ்பீச் என்பதில் இருக்கும் எட்டு பிரிவுகள்
    பற்றி தெளிவு நிலை இருக்குமா என்பது சந்தேகமே.

    இருந்தாலும், இன்றைய 2ம் வகுப்பு படிக்கும் சிறுவன் பேசும் ஆங்கிலத்தில் ஏதும் பிழை இருப்பதாக‌
    எனக்குத் தெரியவில்லை. இன்றைய நாட்களில் ஒரு இந்தியச் சிறுவன், ஏன் ஆசியக்கண்டத்திலிருந்து
    ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் மாணவர்கள் செய்யும் பிழை எல்லாம் ஒன்று தான்.

    அவர்கள் பேசும்பொழுதே இலக்கண சுத்தமாக பேசுகிறார்கள்.

    நான் அமெரிக்காவிலே ஒரு ஐந்து மாகாணங்களில் பேசப்படும் ஆங்கில மொழியை உற்று கவனித்திருக்கிறேன்.
    அவர்கள் ஆங்கிலம் நமது மெட்ராஸ் தமிழை ஒத்து இருக்கிறது. ஸ்லாங் தான் அதிகம் இருக்கிறது.

    இரண்டாவது கருத்து.

    நான் 1994 முதல் பதிவுகள் எழுதுகிறேன். 2000 ம் ஆண்டு முதல் தமிழில் மட்டுமே ஒன்றிரண்டு பதிவுகள்
    எழுதுகிறேன்.

    மொக்ஸ், கலாய்க்கிறான், ரங்க்ஸ் , தங்க்ஸ், மொக்கை,
    என்பதெல்லாம் எந்த தமிழ் நூலில் இருந்து பிடித்தார்கள் ?

    அண்மையில் நான் மிகவும் மதிப்பு வைத்துள்ள ஒருவர் எழுதுகிறார்.

    நீங்கள் எலக்ஸ் என்பது எனக்குத் தெரியாது.

    எலக்ஸ் என்றால் என்ன ? ஃபோடோமெட்ரியில் உள்ள எலக்ஸா? அல்லது ரோமன் எண்கள் எல்.எக்ஸ் ஆ ?
    புரியவில்லையே என்றேன்.

    அதற்கு பதிலாக, இன்னொரு நண்பர் அதெல்லாம் ஒன்றுமில்லை. அவர் உங்களை கலாய்க்கிறார். என்கிறார்.

    ஏன் சொல்லுகிறேன் என்றால்,

    ஒரு மொழி சிதையாமல் இருப்பதற்கு அதில் உள்ள வார்த்தைகளுக்கு ஒரு புனிதம் தரப்படவேண்டும்.
    சிதைத்து பேசத் துவங்கிவிடின் அந்த மொழி தன் அசல் உருவில் தங்காது.
    நாளாகும் போது சிதைக்கப்பட்டு எழுதப்படும் வார்த்தைகள் தான் மொழியின் உண்மை வார்த்தைகளாக‌
    உருவெடுக்கும். பிலாலஜி மாணவன் அதை நன்றாக படித்தவன் அதைப் பற்றி வகுப்புகளில் பேசியவன்
    என்ற நிலையில் பேசுகிறேன்.

    ஆங்கிலத்துக்காக கவலைப்படவேண்டாம். அது நமது தாய்மொழியல்ல.
    தமிழுக்காக கவலைப் படுங்கள். அவள் நம் அன்னை.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. சுப்பு ஐயா,
      உங்கள் ஆதங்கமும், கவலையும் எனக்குப் புரிகிறது.

      நீங்கள் சொல்வது போல் தமிழ் தான் நம் அன்னை.
      தமிழை சிதைக்காமல் இருப்போம்.

      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  10. எத்தனை ரயில்கள் விட்டாலும் சென்னை – பெங்களூர் மார்க்கத்தில் சீட் கிடைப்பது குதிரைக்கொம்பு தான். இந்த வழியில் ரயில்களில் டாய்லெட் வசதிகள் திருப்திகரமாகத் தான் இருக்கும். மங்களூரிலிருந்து சென்னை வந்து பாருங்கள். ரயில்வே சரியான கவனம் செலுத்துவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க செல்லப்பா சார்.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  11. Toilet வசதிக்கு தானே பஸ்ஸில் பிராயானம் செய்யாமல் ரயிலில் பெரும்பாலும் பயணம் செய்கிறோம், அந்த வசதியை பெற்று தந்த திரு.Okhil Chandra Sen அவர்களுக்கு நன்றி.

    டபுள் டெக்கர் ரயில் வசதியைப்பற்றி விவரங்கள் அருமை.
    //இதெல்லாம் ஆரம்பகால சிறு சிறு சங்கடங்கள். போகப்போக சரிசெய்தி விடுவார்கள்.//

    ஆம், நம்புவோம், நம்பிக்கைதானே நல்லது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கோமதி. சின்ன சின்ன சங்கடங்கள் போகப்போக சரியாகிவிடும்.
      நம்பிக்கை தானே வாழ்க்கை.
      உங்கள் அன்பான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதி.

      Delete
  12. நல்ல வேளை மூட்டைப்பூச்சி தொல்லை அனுபவிக்கவில்லை...

    திரு.Okhil Chandra Sen அவர்களுக்கு பாராட்டுகள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete

  13. ஒரு முறை நான் போபாலில் இருந்து மும்பைக்கு சென்றேன். 1974- 1975 வருட வாக்கு என்று நினைவு. அப்போது வெஸ்டெர்ன் ரெயில்வே யில் ஒரு டபிள் டெக்கர் ரயில்வண்டி பார்த்ததாக் நினைவு. வித்தியாசமாக இருக்கிறதே என்று எண்ணிக்கொண்டேன். may be அது இப்போதைய ரயில்களின் முன்னோடி...?ஆரம்ப காலத்தில் பிருந்தாவன் ட்ரெயின் துவங்கியபோது லைப்பிரரி எல்லாம் இருந்து ஓஹோ எனப் பேசப்பட்டது. இப்போது அதற்குப்பதில் மாடி வண்டி, இதுவும் பழகிப்போய்விடும். A/C ட்ரெயினில் பயணிக்க வசதியில்லாதவர்கள் இது குறித்துப் பல நாள் பேசலாம். அனுபவம் புதுமை ... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பிருந்தாவன் ட்ரெயினில் லைப்ரரியா? ஆச்சர்யமாக இருக்கிறதே!
      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி GMB சார்.

      Delete
  14. Nice read.Running a double decker speaks how innovative are the Indian Railways. But, can't the do something to get rid of the stinking mess from the trains.Nice write.

    ReplyDelete
    Replies
    1. thankyou sir for your appreciation .
      We shall hope that our railways move to the nrxt step ahead.

      Delete
  15. //திரு.Okhil Chandra Sen அவர்களுக்கு நன்றியைக் கூறிக் கொண்டு நம் ரயில்வேத் துறை மேன்மேலும் முன்னேறும் என்று நம்புவோம்.//

    நாங்களும் உங்ககூடவே வந்து நன்றி கூறுகின்றோம். நம்பிக்கைதான் வாழ்க்கை!!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் துளசி மேடம் .
      உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.
      தொடர்ந்து வாருங்கள்.
      நன்றி

      Delete
  16. மாடி பயணம் ஆவலாத்தான் இருக்கு.. போகலாம் ரைட்.....

    ReplyDelete
    Replies
    1. மாடி ரயில் பழசாவதற்குள் சீக்கிரம் பயணியுங்கள் உஷா.
      நன்றி உஷா உங்கள் கருத்துக்கு.

      Delete
  17. நீங்க மாடி ரயிலில் பயணம் செய்த மகிழ்ச்சியை பதிவே சொல்லிவிட்டது. ரயிலும் நல்ல கலர்ஃபுல்லா இருக்குங்க‌.

    கடிதம் ஆங்கில அரசாங்கத்திடம் கிடைத்ததால் வேலை உடனடியாக முடிந்தது.இதுவே...

    இங்கு வந்துதான் (மாடி)ரயில் பயணம் எல்லாம்.என்றைக்காவது போனால் படங்கள் எடுத்து வந்து பதிவிடுகிறேன்.நன்றி.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்