Thursday 1 May 2014

கலிபோர்னியாவின் தங்க வேட்டை



தங்க வேட்டையா? அப்படியென்றால்............
தங்க நகைக் கடைகளை அட்சயத் திரிதியை அன்று பார்த்தால்   நம் மக்கள் தங்க வேட்டையாடும்  காட்சியை கண்ணாரப் பார்க்கலாம்.  ஓடி ,ஓடி  வேட்டையாடுவார்கள்.

தங்கத்தின் மீது மனிதனுக்கு எப்பவுமே காதல் அதிகம் தான்.

 "மாற்றம் ஒன்றே மாறாதது " என்கிற சொல்லாடல் தங்கத்தின் விஷயத்தில் பொய்யாகி விட்டது.பின்னே பாருங்களேன். நமக்கு இருக்கும்  ஆசைகளில் மிகப் பெரிய ஆசை " பொன்னாசை "  .மனிதனுக்கு இந்த மஞ்சள் உலோகத்தின் மீது இருக்கும் அளவற்ற காதல் எத்தனயோ  நூற்றாண்டுகளாய் தொடர்கிறது.

"இந்தியர்கள் தான் அதிகமாக  தங்கம்  வாங்குகிறார்கள் ." என்பது பொதுவான கருத்து. ஆனால் நம் ஊரில் எப்பவும் தங்கத்தைக் கடையில் இருந்து தான் வாங்குவோம். ஏன் பிற  நாட்டினர் எல்லாம் திருடுகிறார்களா? என்று கேட்க வேண்டாம்.  நான் சொல்வது கூட்டம் கூட்டமாய்  கலிபோர்னியாவில்  தங்க வேட்டையாடின  வெளி நாட்டினரைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.

கலிபோர்னியாவில் தங்க வேட்டை நடந்த வருடம் 1848. 1848ற்கு முன்பாக அதிகம் பேசப்படாத ஊராக  இருந்த கலிபோர்னியாவிற்கு, ஸ்டட்டர் என்பவர்
சுவிஸ்  நாட்டிலிருந்து பெரிய  விவசாய சாம்ராஜ்யம் அமைக்கும் முயற்சியில்   வந்து இறங்குகிறார். . அங்கிருக்கும்  மக்களை வேலைக்கு  வைத்துக் கொண்டு விவசாயத்தில் இறங்கினார்.  இவருடைய மரம் அறுக்கும் மில்லை கவனித்து க் கொள்ள   மார்ஷல் என்பவரை   வேலைக்கு அமர்த்தினார்.

ஒரு நாள்  மரம் அறுக்கும் மில் அருகில் இருக்கும் ஆற்று மணலில்  மஞ்சளாய் என்னவோ மின்னுவதைப் பார்த்து கையில் எடுத்துப் பார்த்த  மார்ஷல் ஆச்சர்யத்தில் உறைந்திருக்க வேண்டும். அவருக்கு அது தங்கம் என்று புரிந்தது.  திரு. ஸ்டட்டர்   கவனத்திற்கு கொண்டு சென்றார். இருவரும் விஷயத்தை மிக மிக ரகசியமாக வைக்க முயன்றார்கள்.

ரகசியம் என்றாலே  அது எப்படியாவது வெளியே பிய்த்துக் கொண்டு வருவது  இயல்பு தானே. அப்படியே இந்த ரகசியமும் இவர்கள் இருவரைத் தவிர  திரு. Sam Brannan என்பவருக்கு எப்படியோ தெரிந்து போயிற்று.

தங்கம்  கட்டி கட்டியாகக் கிடைக்குமிடம்  தெரிந்தால்  முதல் வேலையாக அங்கே  எவ்வளவு கிடைக்கும் என்று தேடத் தானே பார்ப்போம். அதைத் தானே திரு..Sam Brannan செய்திருப்பார் என்று நினைப்போம். அவர் சிந்தனை வேறாக இருந்தது.

நாம் தங்கம் தேடிப் போனால் எப்படியும் எல்லோருக்கும் தெரிந்து எல்லோரும் நம்முடன் தங்கம் தேடி வருவார்கள் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. இந்தப் போட்டியில் நாம் எதற்கு இறங்க வேண்டும். தங்கத்திற்குப் போட்டி என்றால் அடிதடி , கொலை என்று இல்லாமலா இருக்கும் .ஆனால் அதே சமயத்தில்  இந்த சந்தர்ப்பத்தை உபயோகித்துப்  பெரும் பணக்காரராக  வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்காக அவர்  போட்ட பிளான்  அருமை.

சான்பிரான்சிஸ்கோவிலும், அதை சுற்றிலும் இருக்கும் கடைகளில் இருக்கும்   மண்வெட்டி, மண் அள்ளும் பாண்டு, கடப்பாரை  என்று தங்கம் வெட்டும் உபகரணங்கள்  எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கிக் கொண்டார்.

எந்தக் கடையிலும் இந்த சாமான்கள் இல்லை. அத்தனையையும் இவரே  வாங்கிக் கொண்டார்.. சான்பிரான்சிச்கோவிற்கும்,   தங்கம் கிடைக்கும் இடத்திற்கு நடுவில் மண் வெட்டும் உபகரணங்கள் கடையை அமைத்துக் கொண்டார். பின்னர்,  அவர் சான்பிரான்சிஸ்கோ நகரில் ,தெருத்தெருவாக  கையில் தங்கத்தை ஒரு பாட்டிலில் போட்டு க் கொண்டு ,
" தங்கம் வாங்கலையோ தங்கம் " என்று கூவி கூவி  விற்பதைப் பார்த்த நகரத்தினர்  முதலில் நம்பத்தான் இல்லை.  ஆனால்  சிலரின் ஆர்வம் சும்மா விடுமா என்ன? அவர் சொன்னது உண்மை  என்று புரிய ஆரம்பித்த பின்னர்  தங்க வேட்டை ஆரம்பமானது. முதலில் ஆற்று மணலில் கிடைத்த தங்கம், பின்னர் தோண்டினால் மட்டுமே கிடைக்க ஆரம்பித்தது. அவர்களுக்கு தோண்டுவதற்கு வேண்டிய உபகரணங்கள் நம்   Sam Brannan கடையில் தானே வாங்க  வேண்டும்.15 செண்டிற்கு வாங்கிய மண்வெட்டியை  30 டாலருக்கு விற்க ஆரம்பித்தார் Brannan. எல்லோரும் தோண்டி , உழைத்து, போட்டியிட்டு பல் சங்கடங்களை வென்று  தேடிய தங்கத்தை  விடவும் அதிக பணம்  சம்பாதித்தார் Brannan . கலிபோர்னியாவில் இந்தத் தங்க வேட்டையின் முதல்  கோடீஸ்வரர்  இவர் தான்.

அதற்குப் பிறகு தங்க வயலானது கலிபோர்னியா மாகாணம் எனலாம்..  தங்க வயல் பற்றிய செய்தி மிக வேகமாக தீயாய் பரவ, எல்லோரும் படையெடுக்க ஆரம்பித்தனர். உலகம் முழுதும் இருந்து கிடைக்கும் கப்பலக்ளில் எல்லாம் பயணிக்க ஆரம்பித்தனர். ஆஸ்திரேலியா, சீனா,  ஐரோப்பா என்று பல நாட்டவர்கள்  தங்க வயலில் வந்திறங்கினர்.

வெறும் 200 பேர்களை மட்டுமே கொண்டிருந்த சான்பிரான்சிஸ்கோ நகரம்  தீடீரென்று  3,00,000  மக்கள் (ஒரு வருடத்தில்)   தங்க வேட்டை நடத்துவதை
 மூச்சு முட்ட பார்த்துக் கொண்டிருந்தது எனலாம்.

தங்க வேட்டையால்  தங்கம் கிடைத்ததோ  இல்லையோ, அந்த ஊரின் பொருளாதார  வரை கோடு   மிக மிக வேகமாக ஒரே வருடத்தில் சரேலென உயர்ந்தது . இந்தத் தங்க வேட்டைக்கு வந்தவர்களை  48ers என்றும் , 49ers என்றும்  அழைத்தார்கள். (தங்க வேட்டை  நடந்த வருடம் 1848,1849 )
பல உப தொழில்கள் வேகமாக வளர்ந்தன. ஒரு நேரத்தில் சான்பிரான்சிஸ்கோ  நகரம் பேயடித்த இடம் போல் தென்பட்டது என்றும்  தெரிய வருகிறது. வெறும் உடைந்த கப்பல்கள் மட்டுமே இருந்ததாம். எல்லாம் அங்கு வந்த தங்க வேட்டைக் காரர்கள் பயணித்ததோ , அல்லது உணவு, உடை விற்பதற்காக வந்த கப்பல்களோ எதுவோ ஒன்று.  ஆக தங்கம் என்கிற மஞ்சள் உலோகம் பல வெளி நாட்டவரை இழுத்துக் கொண்டு வந்து சேர்த்தது .

முதலில் அங்கு வந்தவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை . ஒருவரையொருவர் அடித்துக் கொள்வது, இடத்தை வளைத்துக் கொள்வதில் போட்டி   என்கிற  சிரமங்கள்.  பலர் தங்கள் குடும்பங்களை  தங்கள் ஊர்களிலேயே விட்டு விட்டு வந்தவர்கள். பின்னால் சிலர் திரும்பிக் கூட போக முடியாத நிலைமை. எல்லோருக்கும் தங்கம் கட்டி கட்டியாக கிடைத்து விடுமா என்ன? சிலருக்கு குந்து மணியளவு கூட  கிடைக்கவில்லை என்பதும் நிஜம். ஆனால் அதற்காக அவர்கள் தங்கள் உடைமைகளை விற்று, அடகு வைத்து  என்று  பெரும் கடனாளியானவர்கள் ஏராளமோ ஏராளம்...... குடுமபத்தோடு வந்தவர்களில் சிலரின் நிலைமை இன்னும் மோசம் . போட்டி ச்  சண்டையில்  விதவையான பெண்கள் ஏராளம்.பெரும் செல்வ சீமாட்டிகள்  இப்போது வறுமையில்... தங்கம் மேலுள்ள மோகம் இதற்கெல்லாம்  காரணம்.  இப்படி சொல்ல முடியாத  சங்கடங்கள் இருந்தாலும், சிலர் பெரும்  பணக்காரர்களானதும் உண்மையே!

வருடங்கள் செல்ல செல்ல அங்கு தங்கம் கிடைக்கும் அளவும் குறைய ஆரம்பித்தது எனலாம். அதற்குப் பிறகு மக்கள் தங்க வேட்டைக்கு வந்தவர்களும் எண்ணிகையில் குறைந்தது

ஆனால்  Gold Rush  San Franciscoவை  பெரிய நகரமாகவும், கலிபோர்னியா மாகாணத்தை   மிகப் பிரபலமாகவும் ஆக்கியது   எனலாம்.

கலிபோர்னியாவில்  நடந்த தங்க வேட்டைப் பற்றிப் பார்த்தோம்.
நம் ஊரில் நடந்த தங்க வேட்டை பற்றி சொல்லாமல் விடலாமா?

ஒரு சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிலும் , உத்தரபிரதேசத்தில்  தங்கம் இருப்பதாக ஒரு சாமியாருக்குக் கனவு வர, அதைத தோண்டியெடுக்க  அரசாங்கமே குதித்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன. ஆனால் இங்கு ஒன்றுமே கிடைக்க வில்லை. ஆயிரம் டன் தங்கம் என்றால் சும்மாவா? ஒரே நாளில்  வல்லரசாகி விட்டிருப்போம்.  நமக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை போலிருக்கிறது.  ஆனாலும் பரவாயில்லை.  தங்கம் கிடைக்காவிட்டால் தான் என்ன?  நம் இளைஞர்கள் தான் புடம் போட்ட தங்கமாய் இருக்கிறார்களே.  இவர்கள் உழைப்பினால் அதிவிரைவில் இந்தியா வல்லரசு ஆகி விடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.அப்புறம் எதற்கு ஆயிரம் டன் தங்கம் நமக்கு?.....

நம் ஊர் அட்சயத் திரிதியை கதைக்கு வருகிறேன்.....
 
பக்கத்து வீட்டு  நந்தினியை இன்று  கடைக்குப் போகும் போ து பார்த்து கேட்டேன்,.

" நாளை  அட்சயத் திரிதியை ஆயிற்றே. என்ன வாங்குவதாய் இருக்கிறீர்கள்? "

"எனக்கு இதிலிலெல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் என் தம்பி மனைவிக்கு  இதில் நம்பிக்கை அதிகம் அவளுக்குத் துணையாகப் போக வேண்டும் அப்படியே ஏதாவது வாங்கி விட வேண்டியது தான்." நந்தினி சொன்னார்.

இப்படித் தான் நிறைய பேர்.......

ஏதாவொரு காரணம் சொல்லிக் கொண்டு நகைக் கடைக்காரர்களை   வளமாக்கப் போகிறோம் என்று மட்டும் புரிகிறது.

image courtesy---google.
facts---wikkipedia.


34 comments:

  1. //தங்கம் கிடைக்காவிட்டால் தான் என்ன? நம் இளைஞர்கள் தான் புடம் போட்ட தங்கமாய் இருக்கிறார்களே. இவர்கள் உழைப்பினால் அதிவிரைவில் இந்தியா வல்லரசு ஆகி விடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.அப்புறம் எதற்கு ஆயிரம் டன் தங்கம் நமக்கு?.....//

    நம்பிக்கையூட்டும் வரிகள். மிகவும் சுவாரஸ்யமான தங்கமான பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும், மிக்க நன்றி கோபு சார்.

      Delete
  2. 49rs பெயர் காரணம் தெரிந்து கொண்டேன்.. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி . மீண்டும் மீண்டும் வருக !

      Delete
  3. தங்கத்தைப் பற்றிய பதிவைப் பார்த்ததும் ஒரே மூச்சில் படிச்சாச்சுங்க. தங்கமாய் ஜொலிக்கிறது பதிவு .

    இந்தத் தங்க வேட்டையைப் படித்ததும் சில வருடங்களுக்குமுன் மகளின் வரலாற்றுப் பாடத்தில் இதை ஆர்வமுடன் படித்ததெல்லாம் நினைவுக்கு வந்தன‌. இங்கு டிஸ்கவரி சேனலில் 'கோல்டு ரஷ்'னு ஒரு 'ஷோ'வே உண்டுங்க‌.

    ஆமாம், நீங்க யார்கூட துணைக்குப் போய் என்னென்ன வாங்கிட்டு வந்தீங்கன்னு நாளைக்கு வந்து சொல்லுங்க.

    ReplyDelete
    Replies
    1. சித்ரா,
      உங்கள் ஊர் செய்தியாயிற்றே இது. இன்னும் எங்காவது ஆற்றோரத்தில் தங்கம் கிடைக்கிறதா என்று பார்த்துக் கொண்டேயிருங்கள், கிடக்கும்போலிருந்தால் என்னிடம் மட்டும் ரகசியமாய் சொல்லுங்கள். மண்வெட்டி,கடப்பாரை சகிதம் பரந்து வந்துவிடுகிறேன்.நாம் இருவரும் சரிசமமாகப் பிரித்தெடுத்துக் கொள்வோம். அன்றைக்குத் தான் நமக்கு அக்ஷயத் திரிதியை. (சும்மா தமாஷ் ).
      உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும் நன்றி சித்ரா.

      Delete
  4. அட்சய திரிதியை அன்று தங்க தரிசனம். தங்க வரலாறு விவரமாகத் தெரிந்தது. தங்க மோகம் வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. வல்லி மேடம் உங்கள் முதல் வருகை என்னை மகிழ்விக்கிறது. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி மேடம்.மீண்டும் மீண்டும் வருக!

      Delete
  5. மஞ்சள் உலோகம் படுத்தும்பாடு. கலிபோர்னியாவின் தங்க வேட்டை, படிக்கப் படிக்க நல்ல விறுவிறுப்பு. மெகனாஸ் கோல்ட் – என்ற ஆங்கில திரைப்பட காட்சிகள் நினைவுக்கு வந்தன. பகிர்வுக்கு நன்றி!
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. californiaவின் gold rushஐ அடிப்படியாகக் கொண்டஹ்டு தானோ என்னவோ மெக்கனஸ் கோல்ட் .
      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தமிழ் சார்.

      Delete
  6. கலிஃபோர்னியா பற்றிய செய்தி தெரிந்து கொண்டேன். நம்ம ஊர் கூத்து படித்த நினைவு இருக்கிறது. நாட்டின், நாட்டு மக்களின் தலையெழுத்தையே மாற்றும் தங்கம் பற்றி படிப்பது கூட சுவாரஸ்யம்தான். அட்சய திருதியையின் உண்மையான நோக்கத்தை விட்டு விட்டு மக்கள் தங்கம் வாங்குவதில் குஷி(றி)யாக இருக்கிறார்கள்! :))))

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஊர் தங்க வேட்டை நல்ல நகைச்சுவை தான் .
      இன்றைக்கு நம் மக்களின் தங்க வேட்டைப் பற்றி நாளை செய்தித் தாளில் விலாவாரியாகப் படிக்கலாம்.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  7. இதுவரை அறியாத சுவாரஸ்யமான தகவல்
    சுவாரஸ்யமாக்ச் சொல்லிச் செல்லும் கலை
    உங்களுக்கு இயல்பாக அமைந்திருக்கிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி ரமணி சார்.

      Delete
  9. தங்கவேட்டை சுவாரஸயம் ..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் அன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.

      Delete
  10. மேகன்னாஸ் கோல்டு இந்த செய்தி சொல்லுகிறதோ? your story resembles rather maconnos gold film story in some way.
    அண்மையில் ஒரு ஆங்கில படத்தில், ஆபிரிகா வில் டைமண்ட் எடுக்கும் அடிமைத் தொழிலாளர்கள் என்ன பாடு படுகிறார்கள், ஒரு கல் கிடைத்தால், அதை எடுக்க ஒளித்து வைத்து பிறகு என்ன கஷ்ட படுகிறார்கள் என்று பார்த்தேன்.

    எதுவுமே குறைவாக கிடைக்கும்போது அதன் பின்னேயும்
    இல்லாதது எதுவோ அதன் பின்னும் தான் இந்த குரங்கு மனம் தாவிச் செல்கிறது என்றும் பார்க்கவும்.

    இப்போதெல்லாம், அட்சாயா திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டாமாம்.

    ஒரு அஞ்சு முதல் பத்து காரட் பிளாட்டினம் வாங்கி அதில் லக்ஷ்மி தேவியை ஆவாஹனம் செய்து வைத்தால்

    அஞ்சு தலைமுறைக்கு அமோஹமா இருக்கலாம் என்று

    ஊரெல்லாம் பேச்சு வந்து இருக்கிறது.

    தாமரை மலரை ஒரு மண் பானையில் தண்ணீரில் இட்டு
    அந்த மண் பானை நடுவே, மலரில் லக்ஷ்மி தேவியை
    அமர்த்தி, பிளாட்டினம் மெடல் ல் செய்த மாலை அணிவித்து
    நமோ நமோ என்று
    தேவியை பதினாறாம் தேதி வரை பிரார்த்திக்கொண்டால்
    லோகம் பூரா சுபிக்ஷம் வருமாம்.

    இப்படியும் சொல்றாங்க.

    தாத்தா ஒரு பென்சனர். அதுவும் கவர்ன்மெண்ட் பென்சனர் இல்ல.


    என்ன செய்யறது. ?
    www.subbuthatha72.blogspot.com
    www.wallposterwallposter.blogspot.com
    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. ஐயா,

      இது கதையில்லை. உண்மையில் நடந்த Californian Gold Rush. wikkipedia, google, youtube என்று எல்லாவற்றிலும் californian Gold Rush என்று டைப்பினால் கொள்ளை கொள்ளையாய் செய்திகள் வந்து குமிகின்றன. அதனால் தான் பதிவின் இறுதியில் விக்கிபெடியாவிலிருந்து எடுத்து தொகுத்தது என்று போட்டிருக்கிறேன் ஐயா. மேகன்னஸ் கோல்ட் இந்த தங்க வேட்டையை அடிப்படியாகக் கொண்டு எடுத்த படமாயிருக்கலாம் என்பது என் தாழ்மையானக் கருத்து.

      உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். நானும் பென்ஷனர் தான். ,சீனியர் சிட்டிசணிற்கு மட்டும் பிளாட்டினத்தை வாங்க senior cirizen concession கொடுக்கும்படி அரசிடம் மனு கொடுத்துப் பார்க்கலாம். தள்ளுபடி கிடைத்தால் நாமும் அடுத்த வருடம் பிளாட்டினம் மெடல் மாலை லக்ஷ்மி தேவிக்கு அணிவிப்போம். மகிழ்வோம்.

      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், நன்றி ஐயா.
      ஒன்று சொல்ல மறந்தேனே , ஆப்பிரிக்க வைர சுரங்கங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் பற்றி இந்த சுட்டியில் எழுதியிருக்கிறேன். http://rajalakshmiparamasivam.blogspot.com/2013/03/blog-post_19.html. படித்து உங்கள் மேலானக் கருத்துகளை சொல்லுங்களேன்.


      Delete
  11. தங்கம் கிடைக்காவிட்டால் தான் என்ன? நம் இளைஞர்கள் தான் புடம் போட்ட தங்கமாய் இருக்கிறார்களே. இவர்கள் உழைப்பினால் அதிவிரைவில் இந்தியா வல்லரசு ஆகி விடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.அப்புறம் எதற்கு ஆயிரம் டன் தங்கம் நமக்கு?.....//

    அதுதானே ! உழைப்பே உயர்வுதரும் என்பது உண்மைதான்.
    கலிபோர்னியாவில் தங்கவேட்டை பகிர்வு ஆசை பட்டால் ஆய்ந்துவரும் துன்பம் (திருமந்திர பாடலை உணர்த்து கிறது.)என்பதை சொல்கிறது. மனிதனின் ஆசையை பயன்படுத்தி புத்திசாலிதனமாக மண்வெட்டி விற்று கோடிஸ்வரர் ஆன கதை அருமை.
    நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கோமதி, மண் வெட்டி விற்று கோடீஸ்வரர் ஆன செய்தி எனக்கும் மிகுந்த ஆச்சர்யம் . பதிவின் நீளம் கருதி அவருடைய இறுதிக் காலம் பற்றி எழுதவில்லை. எத்தனை வேகமாக அவர் செல்வந்தர் ஆனாரோ அதைவிட வேகமாக வறுமைக்குத் தள்ளப் பட்டார். கையில் காசு இல்லாமல் இறந்திருக்கிறார். . எல்லாம கெட்ட சகவாசம் தான் காரணம்.

      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கோமதி.

      Delete
  12. அருமையான கட்டுரை. இதை மின் தமிழ் மேடையில் இணைக்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மின் தமிழ் மேடையில் இப்பதிவை இணைத்ததற்கு மிக்க நன்றி கீதா மேடம்.

      Delete
  13. // ஏதாவொரு காரணம் சொல்லிக் கொண்டு நகைக் கடைக்காரர்களை வளமாக்கப் போகிறோம் என்று மட்டும் புரிகிறது.//

    நயமான கருத்து..
    தங்க வேட்டை பற்றிய தகவல்கள் திரைப்படம் பார்ப்பது போல விறுவிறுப்பு. அதிலும் மண்வெட்டிகளை விற்று பெரும் பணக்காரர் ஆகியதே புத்திசாலித்தனம்..

    ReplyDelete
    Replies
    1. துரை சார்,
      உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும், பாராட்டிற்கும் நன்றி சார்.

      Delete
  14. இப்படித் தான் நிறைய பேர்... ஏதாவொரு காரணம் சொல்லிக் கொண்டு நகைக் கடைக்காரர்களை வளமாக்கப் போகிறோம் என்று மட்டும் புரிகிறது.

    ReplyDelete
  15. சாமியாரின்கனவில் வந்த தங்கப் புதையலைத் தேடி அரசாங்கமே தங்கள் சுய புத்தியைப் புதைத்து விட்டது.இன்றைய தங்கவேட்டைஅட்சய திரிதையில் வாங்குவது நாளைய சேமிப்பு. சரிதானே டீச்சர்.?

    ReplyDelete
  16. அறியாத தகவல்களுடன் பகிர்வு வெகு ஜோர்.. நன்றி...

    ReplyDelete
  17. தங்க வேட்டை.... பல தகவல்கள் தெரியாதவை.

    உத்திரப் பிரதேசத்தில் நடந்தது ஒரு கேலிக்கூத்து! அரசாங்கமே அதற்காக எத்தனை செலவு செய்தது நினைத்தால் வருத்தம் தான். அந்த பணத்தில் எத்தனையோ நல்ல விஷயங்கள் செய்திருக்கலாம்! - அந்த ஊருக்குச் செல்லும் சாலை வசதிகள் மேம்படுத்தி இருக்கலாம். அங்கே இல்லாத சரியான சுகாதார வசதியைச் சரி செய்திருக்கலாம்..... கலாம்!

    ReplyDelete
  18. தங்கவேட்டை பற்றிய நல்ல தகவல்கள்.

    தங்கத்தில் மோகம் இல்லை என்று சொல்லும் உங்களுக்கு நான் ஒரு தங்க அவகாசம் கொடுக்கிறேன்.
    உங்கள் ஊர் பற்றிய ஒரு தொடர் பதிவு எழுத உங்களை அழைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள். நீங்கள் எழுதிய பின் உங்களுக்குத் தெரிந்த நான்கு பேரை தொடர்ந்து எழுதச் சொல்லி அழையுங்கள்.

    http://wp.me/p244Wx-GT

    அன்புடன்,
    ரஞ்சனி

    ReplyDelete
  19. சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete
  20. ***தங்க வேட்டையால் தங்கம் கிடைத்ததோ இல்லையோ, அந்த ஊரின் பொருளாதார வரை கோடு மிக மிக வேகமாக ஒரே வருடத்தில் சரேலென உயர்ந்தது . இந்தத் தங்க வேட்டைக்கு வந்தவர்களை 48ers என்றும் , 49ers என்றும் அழைத்தார்கள். (தங்க வேட்டை நடந்த வருடம் 1848,1849 )***

    I an not a 49ers fan. You know the football team in CA from San Francisco. I never looked it up either. Now that I learned from you just like bandhu why they are called 49ers! I came here to learn about Gold but what I learned is about American Football! You never know where you get what information! :-)

    Nice write up, Mrs Raji Paramashivam!

    Keep sharing your thoughts, whenever you can, please! :-)

    ReplyDelete
  21. தங்கவேட்டை ---டாடா செய்தது பஞ்சு மூட்டை.

    ReplyDelete
  22. தங்க வேட்டை பற்றிய பதிவு பிரமாதம், மேடம். ஏராளமான புதிய தகவல்கள். அருமை.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்