Friday 5 August 2016

நாமும் பணம் படைத்தவர்களே! (அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு- 8).


அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-7 படிக்க இங்கேகிளிக்கவும்.


image courtesy-http://www.clipartlord.com


ராசி "Tiffany Drive" இல்  தன் மகன் ராஜேஷ் ,பேரன் அர்ஜுனுடனும்,நடந்து  சென்று கொண்டிருந்தாள் . அமெரிக்கா வந்தப்  புதிதில், "பரவாயில்லையே இங்கு வீட்டிற்கு அருகிலேயே ஒரு டிரைவ் இன்  ஹோட்டல் இருக்கிறதே" என்று நினைத்துக் கொண்டிருந்தாள் .

தன் மகனிடம், "என்னடா... இந்தக் குடியிருப்பு வளாகத்திலேயே டிரைவ் இன் ஹோட்டல் இருக்கிறதே" என்று சொல்ல,  முதலில் ராஜேஷிற்கு ஒன்றும் புரியவில்லை. Tiffany drive என்கிற பெயர் தான்  அம்மாவைக் குழப்பியிருக்கிறது என்று பின்னர் ராஜேஷிற்குப் புரிய, அது தெருப் பெயர் மட்டுமே என்று  விளக்கி சொன்னான்i

இன்று  Tiffany drive வழியாக, நடந்து போகையில், இது மனதில் ஓடியதில் ராசி முகத்தில்  ஒரு சின்ன புன்னகை வந்தது. சின்னப் புன்னகையுடன்  நடந்தவள் எதிரே 'புசுபுசு' வென்று வெள்ளைப் பந்துருண்டை போலிருந்த நாய்க்குட்டியை, அமெரிக்கப் பெண்மணி ஒருவர், அழைத்துக் கொண்டு போனார்.
ராசியைப்  பார்த்து ஹாய்  சொல்லவும், பதிலுக்கு ராசியும் ஹாய் சொல்ல இப்பொழுது பழகிக் கொண்டிருந்தாள் .

ராஜேஷிடம்   , " அந்த   'டாக் ' நல்ல அழகு , இல்லடா ?" என்று ராசி  கேட்கவும்,
ராஜேஷோ , " கத்திப்  பேசாதேம்மா . நாய் என்று சொல்லக் கூடாது. நீ இங்லிஷீல் வேறு சொல்கிறாய் "

"ஏண்டா  நாயை, நாய் என்று சொல்லாமல் பின்னே எப்படி சொல்வார்கள்.  "

" இது அவர்கள் வீட்டு செல்லப் பிராணி அம்மா. அதற்கென்று ஒரு பெயர் இருக்கும், அதை சொல்லித் தான் கூப்பிடனும்."

"எனக்கு எப்படிடா அவர்கள் வீட்டு நாயின் பேர் தெரியும்?"

"அம்....மா நாய் என்று சொல்லாதே என்றால் எத்தனை தடவை  நாய் என்று சொல்கிறாய்?  தங்கள் வீட்டு செல்லப் பிராணிக்காக கோர்ட்டிற்குப் போகக் கூடத் தயங்க மாட்டார்கள் அமெரிக்கர்கள்."

"போடா நீயும் உன் அமெரிக்காவும். இம்மென்றால் சிறைவாசம்! உம்மென்றால் வனவாசம்! என்பார்கள் போலிருக்கிறது...என்னவோ போ ... நீங்களெல்லாம் எப்படித்தான் இங்கே இருக்கிறீர்களோ புரியவில்லை!"

"இந்தியாவில், எதற்கெடுத்தாலும், டிவிக்களில் " போச்சு... போச்சு .....கருத்து  சுதந்திரம் போச்சு" என்று கூப்பாடு போடுகிறார்கள். அதற்கு அமெரிக்காவும் ஜால்ரா . இங்கே என்ன வாழ்கிறதாம்?. நாயை.... நாய் என்று சொன்னாலே குற்றமாம்."

அப்பொழுது , ராஜேஷ் ," அதை விடு.இங்கே பார்.... இந்த மரத்தில்......"  காட்டிய இடத்தில் படம் ஒன்று ஒட்டி இருந்தது.

ராசி, கண்ணாடியை கழட்டித்  துடைத்து மாட்டிக் கொண்டு,"என்னது அது? நாய் மாதிரி தெரிகிறதே."  சொல்லி விட்டு 'நாய் 'என்று சொன்னதற்காக நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

"என்ன போட்டிருக்கு?"

அதில் பெரிதாக  ," காணவில்லை"   என்று  'நாய்' படம் ஒன்றைப்  போட்டிருந்தார்கள். அதன் பெயர்,உயரம், நீளம், கலர்,  கடைசியாக பார்த்த இடம் நேரம் ...இத்யாதி...... இத்யாதி..... ,
கண்டுப்  பிடித்து கொடுப்பவர்களுக்கு  நல்ல சன்மானம் வழங்கப்படும் என்றும் இருந்தது."

ஆச்சர்யத்தில், திறந்த வாய், மூடவில்லை  ராசி.
அட........ செல்லப் பிராணி தான் என்றாலும்  இப்படியா?

கூந்தல் இருக்கும் சீமாட்டி அமெரிக்கா!  சீவி முடிக்கிறா, சிங்காரிக்கிறா? நமக்கென்ன  வந்தது........ம்க்கும்... என்று பெரிய  பெருமூச்சை விட்டு விட்டு நகர்ந்தாள் ராசி.

அன்று மாலையே ராசிக்கு  இன்னும்  பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது .
மாலை எல்லோருமாக அங்கிருக்கும் சரவண பவனிற்கு இரவு உணவு சாப்பிட சென்றிருந்தனர்.

வரும் வழியில் ராஜேஷ் சொன்னான்," அம்மா  'மிஸ்ஸிங் பெட்'  நோட்டீஸ் பார்த்து ஆச்சர்யப்பட்டாயே!. இங்கே ஒன்று காட்டுகிறேன் பார்," என்று சொன்னான்.

"என்னடா ?"

காரை ஓட்டிக் கொண்டே ," இடதுப் பக்கம் பார்." என்றான்.


 " பார்லர் " என்று கொட்டை எழுத்தில் போட்டிருக்க  " ஆமாம்! பார்லர் இருக்கு அதற்கு என்ன ?' என்று   ராசி கேட்க

"யாருக்குப் பார்லர்?" என்று நன்றாகப் பார்த்து சொல் பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டே அருகிலிருந்த பார்க்கிங்கில் காரை நிறுத்தினான் ராஜேஷ்.

" ஆமாம்டா ' பெட் பார்லர் ' என்று போட்டிருக்கு. இங்கே என்னடா செய்வார்கள்? "என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே  ஒரு பெண்மணி ," வெள்ளை நாய்க்கு அங்கங்கே  பிங்க் கலரில் அதன் ரோமங்களை  கலரடித்துக் கொண்டு , அதன் தலையில் அழகிய' பிங்க் போ'வை சரி செய்து கொண்டே  அதற்கு முத்த மாரி பொழிந்து கெண்டே வந்தார். .

அருகிலிருந்த தன் காருக்கு சென்று," பின் சீட்டைத் திறந்து , அதைக் கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சி சீட்டில் விட்டு, பிரியா விடை பெற்று முன் கதவைத் திறந்து,  டிரைவிங் சீட்டில் உட்கார்ந்து கொண்டு காரைக் கிளப்பிக் கொண்டு போனார். பார்த்துக் கொண்டிருந்த ராசிக்கு, மயக்கம் வரும் போலிருந்தது.

"எல்லாம் பணம் படுத்தும் பாடு!." நினைத்துக் கொண்டாள் ராசி.
இது நடந்தது சில வருடங்களுக்கு முன்பு.

இந்தியாவிலும், இப்பொழுது செல்லப் பிராணிகளுக்கு  பார்லர்கள் அங்கங்கே முளைத்து கொண்டிருக்கின்றனவே.
அப்படி என்றால் ராசியைப் பொறுத்த வரை நாமும் பணம் படைத்தவர்கள் தானே.(LOL)
,

22 comments:

  1. ஹா... ஹா... ஹா... சிரிக்க முடிந்தது. எனக்கும் நாலு கால்களின் மேல் பாசம் உண்டு. இதை எல்லாம் படிக்க எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. கடவுள் மனிதர்களுக்காக மட்டுமே இந்த உழகைப் படைத்திருப்பதாக நினைக்கிறான் மனிதன். இந்த நாலு கால் ஜீவனைப் பார்த்ததும் கல்லெடுக்கும் சில பேரைப் பார்த்தால் எனக்கு கோபம் வரும் பாருங்கள்..

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ரசித்துப் படித்து சிரித்துக் கருத்திட்டதற்கு நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  2. நானும் இப்போது இங்கிருப்பதால்
    இதையெல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்டுக்
    கொண்டுதான் இருக்கிறேன்
    பெட் என்கிற சொல்லுக்கு சரியான
    அர்த்தம் அமெரிக்காவில்தான் உண்டு
    என் நினைக்கிறேன்

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்க விஜயமா ரமணி சார்? உங்கள் விஜயம் இனிமையானதாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்.
      உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார்.

      Delete
  3. பணம் படுத்தும்பாடு என்பது சரியல்ல....இப்படி நாம் செல்லப்பிராணிகள் வளர்ப்பதால் நமக்கு stress மிகவும் குறைகிறது என்பது மிக உண்மை...இங்கெல்லாம் குழந்தைகள் 17 அல்லது பதினெட்டு வயதில் எல்லாம் வீட்டை விட்டு வெளியேறிவிடுக்கிறார்கள் அதன் பின் கிறிஸ்துமஸ் தேங்க்ஸ்கிவ்விங்க் டே அப்போதுதான் ஒன்று கூடுக்கிறார்கள் அதனால் இங்குள்ளவர்களுக்கு செல்லப் பிராணிகள் மிக அவசியமாகிவிடுகிறது

    எனது வீட்டிலும் 'புசுபுசு' வென்று ஒரு செல்லப்பிராணி இருக்கிறான் அதற்கு சன்னி என்று பெயர் எனது மகனாவே அதை நாங்கள் கருதுகிறோம் அவன் படுத்துறங்குவது எல்லாம் என் அருகில் எனது பெட்டில்தான்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும்,விரிவான கருத்துக்கும் நன்றி MTG

      Delete
  4. Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சார்.

      Delete
  5. அதானே.. நாயை நாய் என்று சொல்வதும் குற்றமா!..அதற்கு வேறூ என்னதான் வேறு பேர் வைத்திருந்தாலும் - நாய்.. நாய் தானே!..

    (நல்லவேளை.. பக்கத்தில் வேறு மெரிக்கன்ஸ் இல்லையே?..)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி துரை சார்.

      Delete
  6. ஆமாம்... பணம் படுத்தும் பாடுதான்...
    ரசனையோடு எழுதியிருக்கீங்க...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி குமார்.

      Delete
  7. மனிதர்களையே நேசிக்கத் தெரியாதவர்கள் செல்லப் பிராணிகளை நேசிப்பது வினோதம்தான் அமெரிக்காவிலும் சரி இங்கும் சரி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி பாலு சார்.

      Delete
  8. தங்கள் எழுத்து நடை மிக அருமை, எளிமையாக அதே நேரத்தில் ஆங்காங்கே நகைச்சுவையைச் சேர்த்து
    "போடா நீயும் உன் அமெரிக்காவும். இம்மென்றால் சிறைவாசம்! உம்மென்றால் வனவாசம்!''
    இந்தியாவில், எதற்கெடுத்தாலும், டிவிக்களில் " போச்சு... போச்சு .....கருத்து சுதந்திரம் போச்சு" என்று கூப்பாடு போடுகிறார்கள். அதற்கு அமெரிக்காவும் ஜால்ரா . இங்கே என்ன வாழ்கிறதாம்?. நாயை.... நாய் என்று சொன்னாலே குற்றமாம்!

    நல்லா இருக்குங்க!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி அருள்.

      Delete
  9. சூப்பர்ங்க !!

    ராசி கண்டு, ரசித்த ஒவ்வொரு சிறு விஷயமும் நகைச்சுவைப் பதிவாக எங்களுக்குக் கிடைத்துவிடுகிறது :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சித்ரா. எத்தனை எத்தனை விஷயங்கள் பார்த்து ரசிக்க . அதைப் பதிவிட்டு விடுகிறேன்.
      நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  10. நாங்கள் அமெரிக்கா போன போதும் நீங்கள் சொன்ன காட்சிகளையும் தங்கள் குழந்தைகளை போல் அவர்கள் பராமரிப்பதை பார்த்தோம்.

    நாய் வளர்ப்பவர்கள் காலையில் அதனுடன் வெளியில் போகும் போது கை உரை அணிந்து கையில் ஒரு பாலிதீன் பையுடன் வருவார்கள் நாய் எங்காவது அசுத்தம் செய்தால் உடனே அதை அந்த கவரில் எடுத்து சென்று குப்பைகூடையில் எறிந்து விடுவார்கள். அது பாராட்டப்பட வேண்டிய விஷ்யம்.

    குழந்தைகள் கொண்டு வரும் நாய்க்குட்டிக்கு வித விதமாய் அலங்கரித்து இருப்பார்கள். பார்க்கவே அழகாய் இருக்கும்.

    ராசி சொல்லியவிதம் அருமையான நகைச்சுவை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கோமதி. அவர்கள் அவர்கள் செல்லப் பிராணிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மலைக்க வைக்கிறது என்பது தான் உண்மை.
      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கோமதி.

      Delete
  11. நலல் பகிர்வு. வளர்ப்புப் பிராணிகள் மீது நல்ல கவனம் கொள்கிறார்கள் அவர்கள். நம்மவர்கள் அந்த அளவிற்கு இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வெங்கட்ஜி. அவர்கள் அளவு நாம் கவனம் செலுத்துவதில்லை தான். எல்லாமே பணம் படுத்தும் பாடு தான் வேறென்ன சொல்லுங்கள்!
      வருகைக்கும் , கருத்துரைக்கும் நன்றி வெங்கட்ஜி.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்