Monday 20 October 2014

ராசி போட்ட முடிச்சு.



" அதோ அங்கே இரண்டாவதாக இருக்கும் . பச்சைக் கலர் புடைவையை எடுத்துப் போடுங்கள் "
அதைப் பார்த்து  விட்டு, " இல்லை இது வேண்டாம் . அந்த ப்ளு  நல்ல இருக்கும் என்று நினைக்கிறேன். அதை எடுத்துக் காட்டுங்கள் " ராசி புடைவை  அடுக்கைக் காட்டி  சொல்லவும், சேல்ஸ்மேன் எடுத்துப் போட்டார்.

" ஓ இதில்  ஜரிகை அடையாக இருக்கிறதே. . கொஞ்சம் கம்மியாக இருக்கட்டும். " என்று சொல்லவும்  வேறு சின்ன ஜரிகைப் போட்டப் புடைவையை சேல்ஸ்மேன்   எடுத்துக் காட்டவும் , ஜரிகை  எனக்குத் தேவலாம் தான். ஆனால் கலர் தான்  பச்சைக்கும், ப்ளுவிற்கும் நடுவில் வேணும் ."

பச்சைக்கும், ப்ளுவிற்கும் நடுவில் என்ன கலராயிருக்கும் என்று விஷ்ணு யோசித்துக் கொண்டே , இந்தப் புடைவை  செலக்ஷனை  முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று நினைத்து  அவரே ஒரு புடைவை  எடுத்துக் காட்ட சொன்னார். ஆனால் ராசி அதைக் கடைக்கண்ணால் கூடப்  பார்க்கவில்லை 
 " இந்தக் கலரெல்லாம் என்னிடம் ஏற்கனவே இருக்கு."  என்று சர்வ அலட்சியமாய் சொல்லி விட்டு, அடுத்த புடைவையை எடுத்துப் போட சொன்னாள் .

பேசாமல் அருகிலிருக்கும் ஸ்டூலில் அமர்ந்து கொண்டார் விஷ்ணு. வேறென்ன செய்வார்....பாவம்....

ராசியோ  சேல்ஸ்மேனை பெண்டு கழட்டிக் கொண்டிருந்தாள்.
 சேல்ஸ்மேன் படும்பாட்டைப் பார்த்தால் மிகவும் பாவமாக இருந்தது விஷ்ணுவிற்கு. பச்சையாகவும் இருக்கக் கூடாது, ப்ளூவாகவும் இருக்கக் கூடாது. பார்டர் அகலமும் கூடாது, குறைவாகவும்  இருக்கக் கூடாது. ப்ளெயினாவும் இருக்கக் கூடாது. புட்டாவும் இருக்க வேண்டும் ஆனால் மிக அதிகமும் வேண்டாம்.  என்று எத்தனை கண்டிஷன்கள. ராசி புடைவை எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதை சாட்சாத் அந்தப் பிரம்மா கேட்டால் , நல்லவேளை  இரண்யன்  வரம் கேட்கும் போது  இத்தனைக் கண்டிஷன்கள் போட்டு நம்மை திண்டாடவிடவில்லையே   என்று நினைத்து திருப்பதியடைவார்.

 ஒவ்வொரு புடைவையாக ராசி "நல்லருக்கா"  என்று கேட்பதும் , எல்லாவற்றிற்கும் இவரோ "ரொம்ப நல்லாருக்கு" (சில சமயம் செல்போனை விட்டு  தலையைத் தூக்காமலே) என்று சொல்வதுமாக இருந்தார். கிட்டத்தட்ட இரண்டு மணி  நேரமாக  இந்தப் போராட்டம் போய்க் கொண்டிருந்தது. 
நடுவில் விஷ்ணு ஆபிசிலிருந்து வந்த போனிற்குப் பதில் சொல்லி முடிக்கும்  போது  ," இந்தப் புடைவையை  பில்லிற்கு அனுப்புங்கள் "  ராசியின் குரல்  தேனாகப்  பாய்ந்தது   விஷ்ணுவின்  காதுகளில்.  விஷ்ணு  அவசரமாகப்  பில்லைப் பார்த்துப் பணம் கட்டக் கிளம்பினார். சீக்கிரமாக  புடைவையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட அவசரப்பட்டார். அவருக்குத் தானே தெரியும் அவர் கஷ்டம்.
அவசரவசரமாக  பில்லைக் கட்டி விட்டுப் புடைவை  வாங்கிக் கொண்டு " போகலாமா ராசி ?" என்று கேட்கவும் ,
ராசி,, " கொஞ்சம் இருங்கள் . முடிச்சுப் போட்டுக் கொண்டு வருகிறேன்? "

" என்ன முடிச்சு? "  கேட்டார்  விஷ்ணு.

" புடைவைத் தலைப்பை  முடிச்சுப் போட வேண்டுமே " ராசி சொல்வதைக் கேட்ட கடை சூப்பர்வைசர்  அவளிடமிருந்து புடைவையை வாங்கிக் கொண்டு போய் வேறு ஒருவரிடம் கொடுக்கவும், ராசி அங்கிருக்கும் ஸ்டுலில் அமர்ந்துக் கொண்டாள்.

விஷ்ணுவும் வேறு வழியில்லாமல் வேறு ஒரு ஸ்டுலில்  அமர்ந்துக் கொண்டு  தன்னைப் போல் மாட்டிக் கொண்டு விழிக்கும் கணவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். " என் வேலை முடிந்து விட்டது ." என்கிறத் திருப்தி அப்பட்டமாய் தெரிந்தது அவர் முகத்தில்.

" அப்படியெல்லாம் உன்  வேலை முடிந்து விடவில்லை " என்று சொல்வது போல் கோபமாய் ராசி வந்து கொண்டிருந்தாள்,கையில்  புதுப் புடைவையுடன்.

" என்ன வேலை முடிந்ததா? " என்கிற விஷ்ணுவின் கேள்விக்கு, ராசி கோபமாக ," நானே போட்டுக் கொள்ளப் போகிறேன். ஆறாயிரம் கொடுத்து  வாங்கியிருக்கிறோம்.  ஒரு மரியாதை இல்லை. அடுத்து வந்தவர்களுக்கெல்லாம்  போட்டுக் கொண்டிருக்கிறார்கள் " என்று சொல்லவும்.

" எதையோ செய்துத் தொலை " என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே வீட்டிற்கு  வந்தார்.

ஒரு வாரம் ஆகியிருக்கும். ஞாயிற்றுக் கிழமை விஷ்ணு பேப்பரில் மூழ்கியிருந்த வேளையில் ராசி புதுப் புடைவையுடன், கையில் கத்திரியுடன் வந்து அமர்ந்தாள்.

" என்ன செய்யப் போகிறாய்? " விஷ்ணு கேட்கவும்.
ராசி "புடைவைத் தலைப்பை  சரி செய்யப் போகிறேன் " என்று சொன்னாள் .

என்ன தான் செய்யப் போகிறாள் ராசி என்று பார்த்தார் விஷ்ணு . 
முதலில்  கத்திரி வைத்து சிறிது கட் செய்து விட்டு  நூலைப் பிடித்து  இழுக்க ஆரம்பித்தாள் .  சர்ரென்று ஒரு இழை வந்தது. பெருமையாக இருந்தது விஷ்ணுவிற்கு . என்னவெல்லாம் தெரிகிறது தன்  மனைவிக்கு என்று பெருமிதத்துடன் ராசியைப் பார்த்துக் கொண்டிருந்தார் விஷ்ணு.

அதற்குள் போன் மணியடிக்கவும், ராசி  போனை  எடுத்து அவள் தோழியுடன்  அளவளாவி விட்டு வந்து திரும்பவும் தொடர்ந்தாள் .. இப்பொழுது ஒருபக்கம இழை இழுக்கும் போது , புடைவைத் தலைப்பு வேறு பக்கமாய் இழுத்துக் கொண்டது.  இந்தப்பக்கம் இழுத்தால் அந்தப்பக்கம் இழுத்துக் கொண்டு புடைவை சுருங்கிக் கொண்டது, அந்தப் பக்கம் இழுத்தால் இந்தப் பக்கமும், இந்தப் பக்கம் இழுத்தால் ,அந்தப் பக்கமும் சுருங்கியது, புடைவை. முதல் இழை வந்தது போல் வரவில்லை. புடவைக்கு வலிப்பு  வந்தது போல் காணப்பட்டது.

ராசிக்கு வியர்வை ஆறாய்ப் பெருக சரி செய்ய பிரம்மப் பிரயத்தனப்பட்டாள் . திரும்பக் கத்திரியை வைத்து கட் செய்தாள் . பிறகு இழை எடுக்க முயற்சித்தாள் . ம்ஹூம் .... வந்தால் தானே . இப்படியே இழுப்பதும், கட் செய்வதும், குரங்கு-அப்பம் கதையாய்  போய்க் கொண்டிருந்தது.

கட் செய்ததில்  புடைவையின் நீளம்  குறைய செய்தது. ஒரு ஸ்டேஜில் ராசி  இழை  எடுப்பதைஅப்படியே நிறுத்தி விட்டு , தையல் மெஷினை எடுத்து, தலைப்பின் ஓரத்தை மடித்து வைத்துத்  தைத்து விட்டாள்  ராசி.  விஷ்ணுவிற்கு புடைவை பற்றி அதிகம் தெரியாது  ஆனாலும்  பட்டுப் புடைவை ஓரம் அடித்து, ராசி  உடுத்திக் கொண்டதில்லையே என்று யோசித்தார்.

அன்று மாலையே  அவர் கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டது. ராசியின்  அத்தை பெண் மாதுரி  வந்திருந்தாள் . ராசியும் அவளுமாக  ரிசப்ஷனிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.  ராசி  புதுப் புடைவை  உடுத்திக் கொண்டு மாதுரியிடம் காண்பிக்கவும் , அவளும்  பார்த்து " ஆஹா........  அழகானக்  கலர் அக்கா ! இந்தக்  கலரில் தான் நானும் புடைவைத் தேடிக் கொண்டிருக்கிறேன் . தலைப்பில்  என்ன டிசைன்? ....பார்க்கலாம்... " என்று பார்த்தாள் .

" அக்கா பாரேன்  பட்டு மாதிரியே இருக்கிறது  இந்தப் புடைவை. . தலைப்பில் ஓரம் அடித்திருப்பதை வைத்துத் தான் இது பட்டு இல்லை என்பது தெரிகிறது. "என்று மாதுரி  சொன்னதும், ராசி முகம் போன போக்கைப் பார்த்து விஷ்ணுவிற்கு  வந்த சிரிப்பையடக்க முடியவில்லை.

மாதுரி  அவளால் ஆன உபகாரம் செய்து விட்டாள் . அதன் விளைவு ......

திரும்பவும் பட்டுப்புடைவை வாங்க ராசியுடன் போக வேண்டும் . க்ரெடிட்  கார்டு பில்லும் அவர் தான் கட்ட வேண்டும்  என்பதை மறந்து விஷ்ணு  சிரித்துக்  கொண்டிருக்கிறார். இது தான் இடுக்கண் வருங்கால் நகுக  போலிருக்கிறது..

  அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


image courtesy--google.

36 comments:

  1. தீபாவளி என்றாலே மகிழ்ச்சி தான்!..

    அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் துரை சார்.

      Delete
  2. புடைவையில் முடிச்சு? கேள்விப் பட்டதில்லை. ஆனால் பாவம் விஷ்ணு! இப்படி எல்லாம் சோதனையா!

    ReplyDelete
    Replies
    1. புடைவைத் தலைப்பில் இருக்கும் குஞ்சலங்களைத் தான் முடிச்சு என்று சொல்லுகிறார்.

      Delete
    2. நானெல்லாம் குஞ்சலங்கள் வைத்த புடைவையாகவே வாங்கி விடுவது வழக்கம். :)

      Delete
    3. ஸ்ரீராம் சார், கீதா மேடம் இருவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  3. குடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  4. ராசியின் புடவை தேர்வு மிக அருமை. இப்போது பட்டு இல்லாத புடவைக்கும் முடிச்சி போட்டு தருகிறார்கள் பட்டு மாதிரி தெரியும்.
    பாவம் விஷ்ணு மறுபடியும் கடைக்கு போக வேண்டும்.
    தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி . உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  5. Diwali wishes for madam
    from devakottai.

    ReplyDelete
  6. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ராசிக்கிட்டே ரகசியமாய் சொல்லுங்கள்.. தலைப்பில் வைக்கும் முடிச்சுகள்
    சிறு சிறு குஞ்சங்களாக பல டிசைன்களில் தனியாகக்கிடைக்கிறது.. வாங்கி புடவை ஓரத்தில் தைத்துக்கொண்டால் பட்டுபுடவை எபக்ட் கிடைக்கும் என்று..!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மேடம். உங்கள் ஆலோசனை நன்றாக இருக்கிறதே !
      உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  7. ராசி ஆனாலும் விஷ்ணுவைப் பாடாய் படுத்துகிறாள். பாவம் விஷ்ணு!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள், ராஜி!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி ரஞ்சனி.
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  8. ராசி போட்ட முடிச்சுல சிக்கிட்டார் விஷ்ணு! ஹாஹஹா! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி சுரேஷ்.
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  9. என்னே விஷ்ணுவிற்கு வந்த சோதனை! பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள்! :)))

    உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்களுக்கும் விஷ்ணுவைப் போல அனுபவம் இருக்கிறதோ?
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி வெங்கட்ஜி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  10. மிகவும் சிரிப்பான அனுபவங்கள்.

    //ராசிக்கிட்டே ரகசியமாய் சொல்லுங்கள்.. தலைப்பில் வைக்கும் முடிச்சுகள்
    சிறு சிறு குஞ்சங்களாக பல டிசைன்களில் தனியாகக்கிடைக்கிறது.. வாங்கி புடவை ஓரத்தில் தைத்துக்கொண்டால் பட்டுபுடவை எபக்ட் கிடைக்கும் என்று..!!//

    பிரச்சனைக்கான முடிச்சு சுலபமாக அவிழ்க்கப்பட்டுள்ளது, அதுவும் இரகசியமாக ! சிறுசிறு குஞ்சங்களாக இருப்பினும், மிகப்பெரிய ’குஞ்சாலாடு’ போன்ற ஆலோசனை!!

    அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோபு சார். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்

      Delete
  11. ஒரு சேலை எடுப்பதற்குள் .... துணிக் கடைகளில் வேலை பார்க்கும் சேல்ஸ்மேன்களுக்கு எதற்கு சம்பளம் என்று புரிகிறது. நல்லவேளை , நான் எனது மனைவியோடு துணிக்கடைகள் பக்கம் போவதில்லை. அவரே பார்த்துக் கொள்வார்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மனைவியுடன் நீங்கள் கடைக்குப் போகாமல் தப்பித்து வருகிறீர்களா?
      அவரிடம் இதைப் பற்றி சொல்ல வேண்டுமே!
      உங்கள் வாழ்த்துக்களுக்கும், தமிழ் மண வாக்கிற்கும் நன்றி தமிழ் சார்.
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  12. இப்படித்தான் ரெடிமேட் ட்ரெஸ் எடுத்துட்டு 'கை' வைத்து தைக்க கடையிலேயே மணிக் கணக்கில் அமர வேண்டும்.

    தீபாவளிப் பட்டாசு(பதிவு) சூப்பரா இருக்குங்க. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. அட.....கை வைத்துத் தைப்பதையும் ஒரு பதிவாக்கலாமோ?
      உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் நன்றி சித்ரா. உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  13. ராசியைப் போலெல்லாம் நான் விழிச்சுட்டு இருக்க மாட்டேன். பாவம் ராசி! பட்டுப்புடைவையைப் போய்க் கிழிச்சித் தைச்சிருக்காங்க. குஞ்சலம் வைத்த புடைவையாகவே வாங்கி இருக்கலாம்.

    ReplyDelete
  14. பிரபல கடைகளில் இதுக்குனு ஆட்கள் உண்டு. நான் புடைவை செலக்ட் செய்து பணம் கட்டியதும் குஞ்சலம் வைத்துத் தருகிறேன் என்று வாங்கிப் போவார்கள். ஏதோ இலவசம் போலனு நாம நினைப்போம். ஆனால் கடைசியில் 50 ரூபாயில் ஆரம்பிச்சு 20 ரூபாய்க்கு வந்து நிப்பாங்க. இத்தனைக்கும் ஒரு பக்கம் தான் குஞ்சலங்கள் போட முடியும். இதைச் சாதாரணத் துண்டிலே போட்டுப் பழகிட்டாப் பின்னாடிப் புடைவைகளில் நாமே போட்டுக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆலோசனை முயற்சித்துப் பார்க்கலாம் போலிருக்கிறதே ! ராசிக்கு சொல்வோம். உங்கள் கருத்துக்கு நன்றி கீதா மேடம்.

      Delete

  15. உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி MTG. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

      Delete
  16. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  17. சுவையான சேலைவாங்கும் படலம்... தீபாவளி இனிதாய் கழிந்து இருக்கும். நன்றி சகோதரி

    ReplyDelete
  18. மதுரை விழா காண....

    http://www.killergee.blogspot.ae/2014/11/blog-post.html

    ReplyDelete
  19. அன்புடையீர்,

    வணக்கம்.

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    மேற்படி பதிவினில் அறிவிக்கப்பட்டுள்ள தங்களுக்கான பரிசுத்தொகை இன்று 10.11.2014 திங்கட்கிழமை தங்களின் வங்கிக்கணக்கினில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தங்களுக்கான பணம் கிடைக்கப்பட்ட விபரத்தை தாங்கள் உறுதிசெய்து மேற்படி பதிவினில் ஓர் பின்னூட்டம் கொடுத்தால் மேலும் மகிழ்ச்சியடைவேன்.

    அவசரம் இல்லை. தங்களால் முடிந்தபோது, செளகர்யப்பட்டபோது உறுதி செய்தால் போதுமானது.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  20. ///
    பச்சைக்கும், ப்ளுவிற்கும் நடுவில் என்ன கலராயிருக்கும் என்று விஷ்ணு யோசித்துக் கொண்டே
    /////

    ////
    இப்படியே இழுப்பதும், கட் செய்வதும், குரங்கு-அப்பம் கதையாய் போய்க் கொண்டிருந்தது.////

    ஆவ்வ்! முடியவில்லை.
    தாமதமாகத்தான் பார்க்கிறேன். அதற்காக தங்கள் எழுத்தில் சுவை குறைந்துவிடுமா என்ன.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்