Friday 27 March 2015

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு --3.

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு --2  படிக்க இங்கே க்ளிக்கவும்.

தொடர்ந்து  படிக்க:  
இதோ  ட்ராலி  ட்ரபிள் ?
 
google images

" என்னடா ராஜேஷ் இது? தரையெல்லாம் மரமா? " கேட்டுக் கொண்டே மகன்  வீட்டை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள்  ராசி.

" தரை மட்டுமில்லைம்மா,  வீடே  மரம் தான் ." என்று மகன் சொல்லி முடிப்பதற்குள்,  பேரன் அர்ஜுன்,  ராசியின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அவனுடைய  பொம்மைகளை  காட்ட அழைத்து சென்று விட்டான்.

மருமகள் ஆர்த்தி, காபிப் போட்டு விஷ்ணுவிடம் கொடுத்து ," மாமா காபி சூடாக இருக்கிறது  சாப்பிடுங்கள்." என்று சொல்லவும் விஷ்ணு  காபியை வாங்கி மெதுவாக குடிக்க ஆரம்பித்தார்.  

" அப்பாடி  ... இந்தக் காபி குடித்து இரண்டு முழு நாட்களாகி விட்டன ."என்று சொல்லவும்,

ஆர்த்தி  ," ஆமாம் மாமா.  ப்ளைட்டில் காபி, வாயில் வைக்க வழங்காது " என்று சொன்னாள் .
ராஜேஷ் அவர்களின் பயண  சௌகர்யங்களைப் பற்றிக் கேட்கவும் ,

விஷ்ணு மகனிடம்," ஏண்டா  இங்கே ஏர்போர்ட்டில்  ட்ராலிகளுக்கு  பணம் கட்ட வேண்டும் என்று சொல்ல மாட்டியோ? " கேட்டார். 

" ஏன் என்ன ஆச்சு? "

" அதை ஏன் கேட்கிறாய்? உன்  அம்மா அடித்த லூட்டி இருக்கிறதே .....  

" என்ன ஆச்சு மாமா "என்று ஆர்த்தி கேட்டுக் கொண்டே   சோபாவில் அமர ....

" கன்வேயர் பெல்ட்டில் மௌன ஊர்வலமாய்  நகர்ந்த பெட்டிகளிலிருந்து எங்களுடையதைப் பார்த்து எடுத்து தரையில் வைத்து விட்டு ட்ராலி  தேடினோமா...."

ஒரு ஓரமாய் ட்ராலிகள், நான்கைந்து தான், அதிகமில்லை  கைகோர்த்துக் கொண்டு  ஜாலியாய்  நின்று கொண்டிருந்ததைப் பார்த்தோம்.

உடனே  ராசி ," நீங்கள் பெட்டியைப் பார்த்துக் கொள்ளுங்கள் நான் போய் எடுத்து  வருகிறேன் " சொல்லி விட்டு  ட்ராலியை  எடுக்கப் போனாள் .

அங்கே போய் ட்ராலியை இழுத்தால்  வர மாட்டேன் என்று அடம் பிடித்தது  ட்ராலி.

அதற்குள் ," ஐயையோ, $5 /- நோட்டைப் போட்டால் தானே வரும் . செக்யுரிட்டி  பார்த்திருந்தால் வம்பாயிருக்குமே."  ராஜேஷ் இடை மறிக்க..

" ஆமாம்......அதையெல்லாம் இப்போ வந்து சொல்லு, எல்லாம் முடிந்த பிறகு. " என்றார் விஷ்ணு.

" கேளு முழு கதையையும் ... " தொடர்ந்தார்  விஷ்ணு. 

" ராசி ட்ராலியை இழுக்க, அதுவோ  தன்  நண்பர்களை விட்டு விட்டு வர மாட்டேன் என்பது போல்  அசைந்து கொடுக்காமல் இருக்க , உன் அம்மா விடுவாளா ? இன்னும் வேகமாய் இழுக்க , அப்போ நீ பார்த்திருக்கணும். உன் அம்மாவுக்கும்  ட்ராலிக்கும்,அங்கே  ஒரு " டக் ஆஃப்  வார் "  நடந்துக் கொண்டிருந்ததை .

 (மாமனாரின் நகைச்சுவை  சிரிப்பை  வரவழைக்க ... , ஆனாலும் ஆர்த்தி   சற்று அடக்கியே  சிரித்தாள்.)

 அந்த சமயம் பார்த்து , ஆஜானுபாகுவாக  இடுப்பில் ஒட்டியாணம் போல் வாக்கி டாக்கி, துப்பாக்கி , சகிதமாய்  போலீஸ்  என்று நினைக்கிறேன் வந்து ," மே ..........ம் " என்று  கத்தினாரே பாக்கணும்  உன் அம்மா வெலவெலத்துப் போய்  விட்டாள் . 

" மாமா , நீங்கள்  மாமியின் உதவிக்குப் போயிருக்கலாமே " சிரிப்பை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு  கேட்டாள்  ஆர்த்தி.

" என்னைத் தான்  அவள் பெட்டிக்குக் காவலாக  நிறுத்தி வைத்து விட்டாளே . இங்கேருந்து என்னால் பார்க்க மட்டுமே முடிந்தது."

" அப்புறம் என்ன ஆச்சு? " கதை கேட்கும் ஆர்வத்துடன் சிரித்துக் கொண்டே ஆர்த்தி  கேட்க,

" உன் மாமி வெல  வெலத்துப் போனாள்  என்பது நிஜம் தான்.  ஆனால் மிரட்டின போலீசிடம் தைரியமாக  " ட்ராலி  .... " என்று இழுக்க ,

அவர் " யு வாண்ட் ட்ராலி ? கிவ்  5 டாலர் ." என்று சொல்ல இவள் கொடுக்க வேண்டியது தானே . அதை  விட்டு விட்டு
அவரிடம்  போய் " வை ?"(why) என்று கேட்டாளே  பார்க்கனும்.

" என்னென்ன கேஸ் இவள் மேல் பாயப் போகிறதோ? எந்த ஜெயிலில் களி........ இல்லையில்லை சீரியல் திங்கப் போகிறாளோ " என்று நான்  பயந்த நேரத்தில்

ஆபத் பாந்தவனாய் அங்கு வந்த நம் சென்னை வாசி ஒருவர்  உன் அம்மாவிடம்  எல்லாம் விளக்கி உன் அம்மாவைக் காப்பாற்றினார்னா  பாத்துக்கோ  என்று சொல்லி முடிக்கவும் 

ஆர்த்தி  தன சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு போவதை  விஷ்ணு கவனித்தார்.  

" எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு தான் இருந்தேன். நீங்க என் புகழ் பாடியது இருக்கட்டும்....." என்று ராசி சொல்லிக் கொண்டே வந்தாள் .
,
ராஜேஷ் ," ஏம்மா...ட்ராலிக்குப்   பணம் கேட்டால் கொடுக்க வேண்டியது தானே. அதை விட்டு விட்டு  அவரிடம் என்ன வாக்குவாதம் ? என்று கேட்க ..

"நான் கண்டேனாடா  இங்கேயெல்லாம் ட்ராலிக்குப்  பணம் கட்ட வேண்டும் என்று .அவர் லஞ்சம்  கேட்கிறார் என்று நினைத்தேன் ."

" ட்ராலிக்கு லஞ்சமா ......." ராஜேஷ், ஆர்த்தி, விஷ்ணு எல்லோருமே அசந்து நிற்க விஷ்ணு சொன்னார்," ஆக போலிசிடமிருந்து இன்று  நீ   தப்பியது , நிஜமாவே உன் பூர்வ ஜென்ம புண்ணிய   பலன் என்று சொல்லு. "

உடனே ராசி, " நீங்கள் மட்டும் என்னவாம்?  காரில் உட்கார்ந்துக் கொண்டு   அலறவில்லை.... " 

விஷ்ணு அலறினாரா.......... ?அவர் எதற்கு அலறினார்? .................(நீங்கள் நினைப்பது புரிகிறது)
இந்த ஜோடி  பயங்கர லூட்டி அடிக்கிறதே  என்றும்  தோன்றுகிறதா ?
தொடர்ந்து வாருங்கள்........                               ( சொல்கிறேன் )

30 comments:

  1. //"நான் கண்டேனாடா இங்கேயெல்லாம் ட்ராலிக்குப் பணம் கட்ட வேண்டும் என்று .அவர் லஞ்சம் கேட்கிறார் என்று நினைத்தேன் ."//

    ராசி நினைத்ததும் தப்பு இல்லை .... ராசி இங்கிருந்து அங்கு போனவராததால் அப்படி ஒருவேளை நினைத்திருக்கலாம்.

    இங்கு இதுவரை டிராலிக்கெல்லாம் நம் நாட்டில் பணம் ஏதும் கேட்பதில்லையே :)

    நகைச்சுவை தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவில் ட்ராலிக்குப் பணம் கட்டத் தேவையில்லை. ஆனால் அமெரிக்காவில் கட்டணம் வசூக்கிறார்கள் கோபு சார். அது என்னை சற்று ஆச்சர்யப் படுத்தியது. அதனாலேயே இந்தப் பதிவு.
      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கோபு சார்.

      Delete
  2. In USA, you dont have to pay for trolley in International airport. Only domestic airport charges for trolleys, typically 1.25 to 1.50 per cart!

    ReplyDelete
    Replies
    1. As far as I know, we do have to pay for trolleys in international airports and for sure it is as high as $5. I would like to mention here that I travel to USA often.

      Thank you for visiting my site and commenting on it.

      Delete
    2. Madam:
      THESE ARE THE FACTS ABOUT JFK airport:

      -Luggage trolleys are available either for a fee of $5 in Terminals 2, 3, 7, 8, 9 or free in Terminals 1 and 4.

      Terminals 1 and 4 are international. while others are local flights. You can verify the fact at JFK site.
      International passengers may not have the local currency for paying the trolleys, especially in quarters. So in International airports these are free and while ticketing they will add some airport tax to make these amenities free.
      I live in USA.

      Delete
    3. Sir/madam,
      I don't remember the terminal where I land. But for sure I can tell that trolleys are not free of cost for international travellers and I am also sure that the price of these trolleys are $ 5.
      And I also think that no one travels without the currency of the country they are going to travel. I have travelled many times to US and have landed in JFK as well as in Newark airport. In both the air ports I have paid for trolleys. Previously, may be some seven years back I paid $1 . Then I remember paying $3 and for the past three years I have been paying $5.
      Though I don't live in USA , Iam a frequent traveller to that country. Based on my travel experiences Iam writing these episodes.

      Please do follow these episodes and also please feel free to point out factual discrepancies if any. Iam delighted to see you back reading my reply.
      Thank you for your revisit and comment.

      Delete
    4. ***In USA, you dont have to pay for trolley in International airport. Only domestic airport charges for trolleys, typically 1.25 to 1.50 per cart!***

      Have you visited all the airports in US? There must have been some type of "sale" to get a deal like this today.

      There is nothing to argue here about the price. The point is when we visit a foreign country no matter how old you are there is lot more to learn and we do make lots of mistakes. We act silly at times and there is nothing to feel ashamed of it. Thats how we crawled and walked and ran from childhood. We go through the same similar phase now. There is a "learning curve" and that's whole the point here. It is not which airport charges and how much they charge. Please understand that.

      Thanks "anonymous genius. We all agree that you know better than the narrator and of course everyone else around here. Congratulations!



      Delete
    5. Thankyou Varun for understanding and appreciating the intention of my post.

      Delete
  3. டிராலிக்கு லஞ்சமா!...

    உண்மையிலேயே - டிராலி தப்பித்தது பூர்வ ஜன்ம புண்ணியம் தான்!..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி துரை சார்.

      Delete
  4. Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி சார்.

      Delete
  5. ஹா... ஹா...

    ரசிக்க காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், படித்து சிரிப்பதற்கும், நன்றி தனபாலன் சார்.

      Delete
  6. விமான தளத்தில் ட்ராலிக்குப் பணம் கொடுக்க வேண்டுமா.? பின்னூட்டச் செய்திகள் குழப்புகிறதே. ராசி ஏர் போர்டிலேயே கேட்டு விளங்கி இருக்கலாம் .பதிவு ரசிக்கும் படி இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாலு சார்.

      Delete
  7. சிரித்து ரசிக்க வைத்த பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பதிவை ரசித்து சிரித்ததற்கு நன்றி சுரேஷ்.

      Delete
  8. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்
    தமிழ் மணம் 3

    ReplyDelete
    Replies
    1. அடுத்தப் பதிவை ஆவலுடன் எதிர்பார்ப்பதற்கு நன்றி கில்லர்ஜி.

      Delete
  9. ரசனையோடு எழுதுகிறீர்கள்...
    அருமை... ரசிக்க வைத்தது அம்மா...

    ReplyDelete
  10. ட்ராலிக்குப் பணம் கட்ட வேண்டும் என்னும் செய்தி எனக்குப் புதியது. ஹூஸ்டனிலோ, மெம்பிஸிலோ ட்ராலி இலவசம் தான். சிகாகோவிலும் ட்ராலி இலவசம். ஆனால் அங்கே போர்ட்டர் இருப்பார். நம்மைக் கஸ்டம்ஸில் விடுவித்துப் பின்னர் உள்நாட்டு விமானச் சேவைக்குச் செல்லும் ரெயிலில் ஏற்றி விடும்வரை வந்து உதவி செய்வார். அதற்கு நாங்கள் 2007 ஆம் ஆண்டு 10 டாலர் கொடுத்தோம். அதன் பின் சிகாகோவில் இறங்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்காவில் சில ஊர்களில் இருக்கும் சில சட்டங்கள் வேறு சில ஊர்களில் இருப்பதில்லை. அது போல் தான் ட்ராலி கட்டண விஷயமும் என்று நினைக்கிறேன். உங்கள் வருகைக்கும், உங்கள் அனுபவங்களை இங்கேப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி கீதா மேடம்.

      Delete
  11. ஆஹா, ராசி மாதிரியே பதிவு கலகல‌ன்னு இருக்கே. தொடர்ந்து வருகிறோம்.

    எங்களுக்கு உள்ளிருந்து வரும்போது ட்ராலி இலவசம். ஆனால் உள்ளே போகும்போது பணம் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிவினால் அமெரிக்காவிலேயே சில விமான நிலையத்தில் ட்ராலிக்குக் கட்டணம் சிலவற்றில் இல்லை என்று தெரிய வருகிறது.உங்கள் வருகைக்கும், அருமையாய் ரசித்துப் பாராட்டுவதற்கும் நன்றி சித்ரா.

      Delete
  12. ட்ராலி ட்ரபிள் ஒரு பக்கம் ரசித்தாலும் சர்வஜாக்கிரதையாய் மாமியார் பற்றிய ஜோக்குக்கு அடக்கி சிரிக்கும் மருமகளையும் சுட்டி யதார்த்தத்தோடு ரசிக்கவைக்கிறீர்கள். பாராட்டுகள் மேடம்.

    ReplyDelete
    Replies
    1. மாமியார் மருமகள் உறவு என்பது கண்ணாடிப் பாத்திரம் போன்றது தானே. ஒரு சிறு விரிசல் வந்தாலும் எந்த நேரம் வேண்டுமானாலும் உடைந்து போய் விடும் என்கிற உண்மை ஆர்த்திக்குத் தெரிந்திருக்கிறது கீதா. . அதனால் தான் அடக்கி வாசிக்கிறாள் .
      நுணுக்கமாய் படித்து ரசித்து ஆர்த்தியைப் பாராட்டுவதற்கு ஆர்த்தி சார்பிலும், என் சார்பிலும் நன்றி சொல்லிக் கொள்கிறேன் கீதா.
      நன்றி.

      Delete

  13. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்!

    ReplyDelete
  14. "நான் கண்டேனாடா இங்கேயெல்லாம் ட்ராலிக்குப் பணம் கட்ட வேண்டும் என்று .அவர் லஞ்சம் கேட்கிறார் என்று நினைத்தேன் ."

    விழுந்து விழுந்து சிரிப்பு

    ReplyDelete
  15. படித்தேன், சிரித்தேன், ரசித்தேன். முன்னர் எப்படி இதைப் படிக்காமல் விட்டேன்? :)))

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்