Tuesday 3 March 2020

கம்பனும், சண்டையும்.(கம்பன் என்ன சொல்கிறான்-19)





"ஷட் அப்." வேகமாக நான் கத்த..

ஒரு பத்து செகண்ட் மயான அமைதி.

பிறகு " நான் சும்மா உன்னுடன் ஆர்க்யூ செய்யவில்லை."  மீண்டும் ஆரம்பிக்க...

ஒரு முறை முறைத்து ," நான் என்ன செய்கிறேன்  என்பது எனக்குப் புரிகிறது." அழுத்தமாக ஆணித்தரமாக சொன்னேன்.

தலை வலி மண்டையே உடைந்து விடும் போலிருந்தது.
இப்படி சண்டை போட்டால், பின் தலை மட்டுமா வலிக்கும்.?மூளையே உடைந்து சிதறும்.

போய் சூடாக ஃபில்டர் காபி போட்டுக் கொண்டு வந்து உட்கார்ந்து, " இப்ப சொல்...என்ன சொல்லணுமோ சொல்லு. ஆனால் குரல் உசத்தக் கூடாது. அதுக்கு சரின்னா...." சொன்னேன்.

ராஜி...கொஞ்சம் காது கொடுத்து கேளு ராஜி. நீ என்ன சொல்ற?  " ராமனிடத்திலும், சீதையிடத்திலும் குறை இருப்பதாக சொல்கிறாயே. அதைத் தான் கண்டிக்கிறேன். ராமனையும், சீதையையும் பற்றி குறை சொல்லலாமா? பரந்தாமனையும், திருமகளையும் குறை சொன்னால் அடுக்குமா? 
அதை சொன்னால் நீ என்னமோ குதி, குதி, குதின்னு குதிக்கிறாய்? "

"நான் உன்னை ஒன்று கேட்கட்டுமா?" இது நான்.

"கேளு"

"நீ மனசாட்சியா இல்லை மட சாட்சியா?அதை மட்டும் எனக்கு விளக்கு."

என்னவோ போ. அலுத்துக் கொண்டது மனசாட்சி...

"நான் எங்கே சொன்னேன்...கம்பர் சொல்கிறார் என்றல்லவா சொன்னேன்.
நானும் நீயும் பேசிக் கொண்டே இருந்தால் இதுக்கு ஒரு தீர்வு கிடைக்காது. பஞ்சாயத்திற்கு நாலு பேரைக் கூப்பிடுவோம்."

'படிச்சிட்டிருக்கிற நீங்க தான் சொல்லுங்களேன்...'

"கம்பர் அவருடைய பாடலில் சொன்னதைத் தான் நான் சொன்னேன். அதைப் புரிந்து கொள்ளாமல் மடமையான என் மனசாட்சி என்னுடன் சண்டை போடுகிறது. என்ன செய்யலாம்?"

முந்தின பதிவில் கம்பர் ராமனின் படை பலத்தையும், சீதையின் வாள் வீச்சையும் பற்றி விவரமாக சொன்னதைப் பற்றி எழுதியிருந்தேனே, அதே போல் இருவரிடமும் இல்லாத ஒன்றைப் பற்றியும் ஒரு பாடல் இருக்கு.

"மருங்கு இலா நங்கையும், வசையில் ஐயனும்..."


இடையே இல்லாத சீதையும், ,குற்றமே இல்லாத ராமனும் .... என்று ஆரம்பிக்கிறார்...

அதைப் பற்றி எழுதப் போகிறேன்னு  சொன்னதுக்குத்  தான் இத்தனை ஆர்ப்பாட்டமும். 

மட சாட்சியே! முழுப் பாடலையும் சொல்கிறேன்...கேளு.....

வாசகர்களே...நீங்களும் படித்து ரசியுங்கள்...

சீதையும் ராமனும், ஒருவரையொருவர் பார்வையாலேயே கொள்ளையடித்துக் கொண்ட பின்னர்...ஈருடல் ஓருயிர் ஆகி விட்டனராம். 


பார்வைப் பரிமாற்றம் மட்டும் தானாம்.  ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவேயில்லையாம்.  


அப்புறம்?


கதையை நானா சொல்கிறேன்... கம்பர் அல்லவா?


ஏன் பேசிக் கொள்ளவேயில்லையாம் தெரியுமா?


பாற்கடலிலிருந்து பிரிந்து வந்த தம்பதியினர்.....பல காலத்திற்குப் பிறகு இப்ப தான் பார்த்துக் கொள்கிறார்களாம். நீண்ட பிரிவிற்குப் பிறகு பார்த்துக் கொள்ளும் காதலர்களுக்கிடையில்  பேச வேண்டிய அவசியமென்ன ? 

உங்கள் அனுபவத்திலிருந்து நீங்களே சொல்லுங்கள்.... பேசாமலே, கண்களாலேயே காதல் பரிமாற்றம் நடப்பது இயல்பு தானே.
அதைத் தான் கம்பரும் பாட்டில் சொல்கிறார்.
அம்பிகாபதி காதல் வயப்பட கம்பரின் பாடல்களே காரணமாயிருக்கலாம். இது என் கருத்து. 
கம்பர் காதலால் உருகி உருகி எழுதியிருக்கிறாரே. அதனால் சொன்னேன்.

மன(ட)சாட்சியே! இப்ப புரிந்ததா?


என்ன பதிலையே காணோம்?

ஓ ! எஸ்கேப் ஆயிட்டியா?  

அதானே பார்த்தேன்...

கம்பன் பாடலைப் பார்ப்போமா?
பால காண்டம். மிதிலைக் காட்சிப் படலம். பாடல் எண் 601

மருங்கு இலா நங்கையும்
      வசை இல் ஐயனும்
ஒருங்கிய இரண்டு உடற்கு 
    உயிர் ஒன்று ஆயினார்
கருங் கடல் பள்ளியில் 
  கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால் 
   பேசல் வேண்டுமோ?


இடையே இல்லாத சீதையும், குற்றமே இல்லாத ராமனும், ஒருவர் மேல் ஒருவர் கொண்ட மிக்கக் காதலால் ஒன்று பட்ட உடல்களுக்கு ஓர் உயிர் என்று சொல்லுமாறு ஆனார்கள். மிகப்பெரிய பாற்கடலில் ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையிலே
ஒருவரோடு ஒருவர் கலந்திருந்தவர்கள்  பிரிந்து போய், மீண்டும் ஓரிடத்தில் சேர்ந்தால் ,அவர்களுக்குள் உண்டாகும் காதலை சொல்லவும் வேண்டுமோ?

மீண்டும் வேறொரு பாடலுடன் சந்திப்போமா?

நன்றி.

6 comments:

  1. பேச்சுத் தமிழா [ ? ]

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  2. Replies
    1. உங்கள் வருகைக்கும், ரசித்துப் படித்ததற்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

      Delete
  3. சுவையான விளக்கம். பதிவு நன்று.

    தொடரட்டும் கம்பரசம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருஅகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி வெங்கட்ஜி.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்