Friday 11 January 2013

தேன் !! தேன்!! தேன் !!!



தேன்  !!   நினைத்தாலே   இனிக்கும் !!

சின்ன   வயதில்    ஜுரம்    வந்தால்   மாத்திரையைப்  பொடி செய்து   தேனுடன்  கொடுக்க   உண்டிருக்கிறேன்.  அந்த   சுவையும்   தனி  தானே .  தேனின்  சுவையாலோ   அல்லது   கொடுப்பது   என் பாட்டி  என்பதாலோ       அந்த சுவை   எனக்கு  பிடித்துப்   போனது.  அல்லது  இரண்டுமே  காரணமோ ? தெரியவில்லை.

என்  குழந்தைகளுக்கும்  இது போல் தேன் குழைத்து  மருந்து  கொடுத்திருக்கிறேன்.

ஆனால்  என் பேரனுக்கோ  பேத்திக்கோ  கொடுப்பதற்கு   டாக்டர் " தடா " போட்டு விட்டார் , இப்பொழுதெல்லாம்   நல்ல தேன்  கிடைப்பதில்லை  என்று.

அவர் சொல்வது   சரி தானே!!  

தேன்  என்ற பெயரில்    வெல்லப்பாகு  தானே கிடைக்கிறது   நிறைய  கடைகளில் .

'வள  வள'  என்று  தேனைப்  பற்றியே  பேசிக்கொண்டிருக்கிறேன் .

விஷயத்திற்கு  வருகிறேன்.  நான் சொல்ல  வந்தது   என்னவோ   தேனீயைப்  பற்றி  .

என் பேரன் பேத்திக்கு   தேன்  தான் இல்லை  . அவர்களின்   பேரன்  பேத்திக்கோ  தேனீ யையே     படத்தில்   தான்   காட்ட வேண்டிய   நிலை  வந்து விடுமோ   என்னமோ  ? 


நம்   வீட்டுக்   கொல்லைப்   புறத்தில்,  மரங்களின்   கிளைகளின்   ஊடே,  பெரிய    கட்டடங்களின்   தாழ்வாரங்களில்   தேனீ   சிறிய  கூடு  கட்டிப்     பெருக  வாழும்.

கிர் ....................என்று   நம்மை   சுற்றி   பறக்கும்போது    எங்கே  தேன்கூடு   என்று  நின்று,   நிமிர்ந்து   தேடிப்   பார்க்காமல்   போனவர்கள்   மிக  சிலரே  இருப்பார்கள்


கூட்டுக்    குடும்பத்திற்கும் ,  சேமிப்பிற்க்கும்    உதாரணமாக    தேனீ யைத்   தானே  சொல்வோம்.   

இவை இரண்டும்    வேகவேகமாக   தொலைந்து   வருவதைப்  போல்   தேனீயும்    வேகமாக   தொலைந்து   வருவதாக   புள்ளி  விவரங்கள்   அலறுகின்றன.


ராணித்  தேனீ  ஒரு சர்வாதிகாரியாய்    ஆட்சி   நடத்தும் .
 ராஜா தேனீ    பேருக்குத்தான்   ராஜா..   ராணித்  தேனியின்   வேலைக்காரத்  தேனீக்கள்   ராஜாவை   ஒரு பொருட்டாக   மதிப்பதில்லை.  

வேலைக்காரத்  தேனீக்கள்   ராணியின்   கட்டளையை  ஏற்று    ஐந்து    கி..மீ  சுற்றளவிற்கு    பறந்து   பறந்து     பூக்களின்    மகரந்தத்தை    கொண்டுவந்து  
சேர்த்து    உமிழ் நீரால்    தேனாக்கும்.

அந்தத்  தேனைத்   தான்   நாம் தேனடையிலிருந்து     திருடிக் கொள்கிறோம்  .

இப்படி  நாம்    திருடி   தின்றது    போதாது  என்று   தேனீக்களுக்கே    குழி பறித்துக் கொண்டிருக்கிறோம்.

தேனீக்களிடம்  ஒரு அரிய   குணம் .கூட்டை  விட்டு     கிளம்பும்   தேனீ  திரும்பவும்    தன்  கூட்டைத்   தவிர    வேறு   கூட்டிற்கு   செல்லாது.

'மதியாதார் தலை  வாசல்'      இல்லை 
தன்  வாசல்   தவிர   வேறு    தேனீக்களின்   வாசலை  மிதிக்காதாம்.

அவை    தன்   கூட்டை   சென்றடைய     பூமியின்   மின் காந்த   அலைகளைத்   
தான்    நம்பியிருக்கும்.

இங்கே தான்   மனிதன்    அதற்கு    ஆபத்தாகிறான்.  

நாம்   உபயோகிக்கும்    அலைபேசியின்    அலைகள்   இந்த மின் காந்த அலைகளை    சிதற   அடிக்கின்றன.

தேனீக்கள்    வழி தெரியாமல்  குழம்பிப் போய்    ,தடுமாறி    ,தத்தளித்து    
பின் கூட்டம்   கூட்டமாக   செத்து  மடிகின்றன.

தம்மாத்தூண்டு   பூச்சி   தானே !  
 இதற்காக    ஏன்  இந்த   ஆர்ப்பாட்டம்   என்று சிலர்   நினைக்கலாம்.


உலகிலுள்ள   பல  லட்சம்   தாவரங்கள்,   பூக்கள்  , தேனீக்களின்   அயல் மகரந்த   சேர்க்கையை (cross pollination)    நம்பியே இருக்கின்றன.

தேனீக்கள்  இல்லையென்றால்    தாவரங்களே இல்லை .

அப்புறம்   நாம்   உணவுக்கு  என்ன செய்வது.?அதோ கதி தான்.

பிறகென்ன ....
,..  மாயன்   காலண்டரும்  தேவையில்லை   
மச்சான்    காலண்டரும்    தேவையில்லை.

தேனீக்க்ளை   ஒழித்து நமக்கு நாமே   நாள்   குறித்துக்   கொண்டிருக்கிறோம்.

ஆஸ்திரேலியா ,   ஜெர்மனி   ,நியுசிலாந்து   ஆகிய  நாடுகளில்   தேனீக்களின் எண்ணிக்கை    பாதியாக   குறைந்து விட்டதாக    ஒரு ஆய்வறிக்கை     கூறுகிறது. அதே  ஆய்வறிக்கை    அமெரிக்காவின்   சில பகுதிகளில்  எண்பது சதவிகிதம்    அழிந்து விட்டதாக     அபாய   அறிவிப்பு   தருகிறது.

மறைந்த    விஞ்ஞானி     ஆல்பர்ட் ஐன்ஸ்டின்   ஒரு   எச்சரிக்கை    விடுத்திருந்தார் ..

என்றைக்கு   பூமியில்   தேனீக்கள்  இல்லாமல்   போகிறதோ   அன்றிலிருந்து    ஐந்து    வருடத்திற்குள்     மனித இனம்    பூண்டோடு    அழிந்து   விடும்   என்ற
அபாயச்  சங்கை   ஊதியிருந்தார் .

சுனாமி   இல்லை,  போர்  வேண்டாம்  ,  பூகம்பம்   கிடையாது.  கொசுவை  விட   சற்றே   பெரிதான  தேனீ   போதும்.  நாம்   செய்யும்   துரோகத்திற்கு     நம்மை    பழி வாங்கி  விடுமோ?

இனிமேலாவது    மரம் வெட்டாமல்  இருப்போம்.
பூச்செடிகள் ,   மாடித்தோட்டங்களும்    அமைப்போம்.

அது   மட்டும்   போதுமா?

செல்போன்  "ரிங்"   ஆகும் போதெல்லாம்   அது   மனித இனத்திற்கே   அடிக்கப்படும்    அபாய  மணியாக   நினைத்து    விரைந்து    பேச்சை   முடிப்போம்.

சொந்த செலவில்  சூன்யம்   வைத்துக்   கொள்ளாமல்   இருக்கப்   பார்ப்போம்.

பி.கு.   image courtesy -   google

22 comments:

  1. சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளாமல் இருக்கப் பார்ப்போம்...

    பகிர்வுகள் பயன்மிக்க சுவை .. தேன் ..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜராஜேஸ்வரி ,

      உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும்.

      ராஜி

      Delete
    2. தேன் பொன்ற இனிமையான விஷயங்களுடன் கூடிய மிகவும் பயனுள்ள பதிவு.

      //சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளாமல் இருக்கப் பார்ப்போம்.//

      தேனி போல் கொட்டிடும் அபாய அறிவிப்பு.

      பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      Delete
    3. வைகோ சார்,

      உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.
      //தேனி போல் கொட்டிடும் அபாய அறிவிப்பு.// மிகவும் ரசித்தேன்.நான் பதிவில் எழுத விட்ட வரியை நீங்கள் பின்னூட்டமிட்டு விட்டீர்கள் .
      வாழ்த்துக்கும் நன்றி சார்.

      ராஜி.

      Delete
  2. cellphone radiation thenikalai kulapi maranikka vaikirathu/// aww mukkiyamana visayam...romba thevaiyanathu..pakirnthamaiku nandri...i think researchers will do good on this..intha ulagathil ella uyirkalum etho oru kaaranathirkaagave padaithirukirar kadavul..ellam manitha thevaikagave...sontha selavil sooniyam...nijamana vaarthai.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் . எல்லா உயிர்களும் ஈதோ ஒரு காரணத்திற்காகத் தான் இவ்வுலகில் இருக்கின்றன. மிகவும் உண்மை.
      இதையும் கூட ஐன்ஸ்டீன் சொல்லியிருக்காரு.

      வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

      ராஜி

      Delete
  3. மாயன் நாட்காட்டியை கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு ஜாலியா இருக்கிறப்போ, தேனீயை பாதுக்காக்கணும், இல்லாட்டி அவ்வளவு தான்-ன்னு பயமுறுத்துறீங்களே!
    யாரங்கே! இருக்கற தேனீயை எல்லாம் பாதுகாக்க ஏற்பாடு செய்யுங்க!
    அப்பா! நம்ம வேலை முடிஞ்சுது.

    கோவிச்சுக்காதீங்க ராஜி! சும்மா வித்தியாசமா கருத்துரை போடலாமேன்னு!

    கடைசி வரி 'நச்'

    இதைபோல எத்தனை எத்தனை அழிவோ, மனிதனால்! நினைத்துப் பார்க்கவே கவலையாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துரையை மிகவும் ரசித்தேன்.
      வித்தியாசமான கருத்துரை ரொம்ப நன்றாக இருக்கிறது.நீங்கள் பாராட்டுவதை என்னால் உணர முடிகிறது.
      மனித குலமே மனிதனாலேயே அழியப் போகிறதோ என்னவோ?யார் கண்டது?

      வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி .

      ராஜி

      Delete
  4. Knowingly or unknowingly, we dig our own graves in the name of technology. Very informative & interesting read.

    ReplyDelete
    Replies
    1. yes sir. it is true that we are digging our own graves.
      but we are all helpless watchers.

      thanks for your valuable comments.

      Delete
  5. ராஜலஷ்மி,

    "கொடுப்பது என் பாட்டி என்பதாலோ"____கண்டிப்பாக இதுதான் உண்மை.

    "ராணித் தேனீ ஒரு சர்வாதிகாரியாய் ஆட்சி நடத்தும்.ராஜா தேனீ பேருக்குத்தான் ராஜா.ராணித் தேனியின் வேலைக்காரத் தேனீக்கள் ராஜாவை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை"___ரசித்தேன்.

    ",..மாயன் காலண்டரும் தேவையில்லை மச்சான் காலண்டரும் தேவையில்லை"__ எதுகை,மோனையுடனான நகைச்சுவை.இதுபோல் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். சிட்டுக்குருவிபோல் இதைப்பற்றியும் யோசிக்க,இல்லை செயல்படத்தூண்டும் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. சித்ரா,

      நீங்கள் இவ்வளவு ரசித்து கருத்துரை எழுதியிருப்பது என்னை மகிழ்விக்கிறது.
      நான் பாட்டிக்கு மிகவும் செல்லமான பேத்தி.உண்மை.

      மிக்க நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும். கருத்துரைக்கும்.

      ராஜி

      Delete
  6. ஒவ்வொரு மனிதனும் இயற்கைக்கு எதிராய் குழிவெட்டிக் கொண்டே இருக்கிறான். என்று தான் விடிவுகாலமோ.....

    தேனீ பற்றிய செய்திகள் பயத்தையே தருகின்றன.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

      ராஜி

      Delete
  7. //இனிமேலாவது மரம் வெட்டாமல் இருப்போம்.
    பூச்செடிகள் , மாடித்தோட்டங்களும் அமைப்போம்.//
    இது நிச்சயம் செய்யக்கூடியதுதான். ஆனால் வீட்டுக்கு வீடு தேனீ வளர்ப்பதை பற்றித்தான் நினைக்க முடியவில்லை. ஒரு புறா அல்லது மீன் வளர்ப்பதை போல், வீட்டில் தேனீ வளர்க்க முடியுமா என்ன? பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி நாமே அதை அழித்துவிடுவோம் என்பதுதான் நிதர்சனம். காடு வளர்ப்பு மட்டுமே தேனீ வளர்ப்புக்கான வழி என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முத்துகுமுரன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      ராஜி

      Delete
  8. தேனீ போல தேன் குறித்த பல அரிய
    இதுவரை அறியாத பல தகவல்களை
    தொகுத்துத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    பதிவின் தலைப்பு மட்டும் அல்ல
    சொல்லிச் சென்ற விதமும் தேன் தேன் தேன்
    பயனுள்ள பதிவிற்கு மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரமணி சார்,

      உங்கள் பாராட்டுக்கு,பொங்கல் வாழ்த்துக்கு நன்றி சார்.
      உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      ராஜி

      Delete
  9. தம்மாத்தூண்டு பூச்சி தானே !
    இதற்காக ஏன் இந்த ஆர்ப்பாட்டம் என்று சிலர் நினைக்கலாம்.


    உலகிலுள்ள பல லட்சம் தாவரங்கள், பூக்கள் , தேனீக்களின் அயல் மகரந்த சேர்க்கையை (cross pollination) நம்பியே இருக்கின்றன.

    தேனீக்கள் இல்லையென்றால் தாவரங்களே இல்லை .//

    உண்மை உண்மை தேனீக்கள் இல்லையென்றால் தாவரங்கள் இல்லை தான்.
    அருமையான் பதிவு.
    நமக்கு நம் பாட்டி கொடுத்தது நம் பேரன் பேத்திகளுக்கு தடா தான் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
      நம் ஸௌகர்யங்க்ளுக்காக இயற்கோடு போட்டிப் போட்டு பலவற்றை அழித்துக் கொண்டிருக்கிறோம்.

      அதன் விளைவை நம் வம்சத்தினர் எதிகொள்ளப் போகிறார்கள் .
      உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

      ராஜி.

      Delete
  10. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி .

      உங்களுக்கும் குடுபத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      ராஜி

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்