சென்ற முறை பெங்களூர் சென்ற போது , நண்பரைப் பார்க்க நேர்ந்தது. அவருடன் பேசிக்கொண்டே நடந்தோம். பரஸ்பர நல விசாரணை.. நான் சற்றுப் பின்னால் நடந்து கொண்டிருக்க கணவரும்,நண்பரும் முன்னால் பேசிக்கொண்டே நடத்து கொண்டிருந்தார்கள்.
சட்டென்று நண்பர்," வருகிறீர்களா ஒரு காபி சாப்பிட்டுக் கொண்டே பேசலாம் " என்று சொல்லவும், எங்களுக்கும் காபி சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்ற
நன்பரிடமே " இங்கே நல்ல ஹோட்டல் ஒன்றிற்குப் போகலாமே " என்று சொல்லவும்.
நண்பர்," ஹள்ளி மனே " போகலாமா ? "
" ஏதோ ஒன்று போகலாம் வா " என் கணவர் சொல்ல
" ஏதோ ஒன்று இல்லை . மிகவும் அருமையாக இருக்கும். கிராமத்து செட்டப்பில் இருக்கும் " என்று ஹைப் கொடுத்தார் நண்பர்.
"அதென்ன கிராமத்து செட்டப் ? " நான் வினவ
"வாங்க மேடம், வந்துப் பாருங்க " என்று சொல்லிக் கொண்டே " ஹள்ளி மனே"க்குள் அழைத்துச் சென்றார்.
" அட... கிராமத்து வீடு போலிருக்கிறதே " என்று நான் சொல்லவும்,
"அதே தான் மேடம், "ஹள்ளி மனே " என்றால் கிராமத்து வீடு "என்றார்.
அழகிய வேலைப்பாடமைந்த தூண்கள் தாங்கிப் பிடிக்கும் கூரை, உடகார்ந்து சாப்பிட பென்ச் ,. வாழையிலையில் சாப்பாடு என்று கிராமத்து வீட்டை நினைவுப்படுத்தத் தவறவில்லை.
" எரடு கா...............பி..... " என்று சர்வர் கத்தி ஆர்டர் கொடுக்காதது தான் பாக்கி.
யோசித்துப் பார்த்தேன். கிராமம் விட்டு நகரம் என்று மக்கள் கூட்டம் கூட்டமாய் தாவிக்கொண்டிருக்க, நகருக்குள், கிராமத்தைக் கொண்டு வர ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள். ஓடு வேய்ந்தக் கூரை, அங்கங்கே கோலம், சுவற்றின் பெயிண்ட் கலர், எல்லாமே மனதைக் கொள்ளையடித்தது.
இவ்வளவு அருமையான இந்த ஹோட்டலில் , விலையும் சற்றே அதிகம் என்று சொன்னார் நண்பர். ஆனால் கூட்டம் அலை மோதுகிறது.
வேடிக்கை தான் இது. கிராமம் விட்டு ஆசை , ஆசையாய் நகரத்திற்குக் குடிப் பெயர்ந்து வந்து , மீண்டும் கிராமத்து விருந்தை அதிகப் பணம் கொடுத்து,உண்கிறோம். ஆக இதல்லாம் பழைய விஷயங்கள் என்று எதையும் நாம் ஒதுக்கி வைக்க முடியாது. எல்லோரும் மறந்திருக்கும் போது யாரோ ஒருவர் அதையே மீண்டும் புதுப் பொலிவோடு கொண்டு வந்து விடுகிறார். " Old is Gold " தானே.
நிறைய விஷயங்கள் இப்படித்தான் . சாதத்தை வடித்துக் கொண்டிருந்த நம்மை குக்கரில் சாதம் வைக்க சொன்னார்கள் . திரும்பவும் இப்பொழுது சாதம் வடிப்பது தான் நல்லது என்கிறார்கள்.
உணவு விஷயத்தில் தான் இப்படியென்றால், கம்ப்யுட்டர் படுத்தும் பாடு இருக்கிறதே........ மெயில் என்று ஒன்று வந்தாலும் வந்தது , அலுவலகக் கடிதங்கள், எல்லாமே மெயிலில் சென்றுக் கொண்டிருக்கின்றன.
என்ன வேகம்! என்னத் துல்லியம்! தவறுகள் இல்லாதக் கடிதங்கள் அசத்துகின்றன. மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்குக் கொள்ளைக் காரர்களும் மிக அதிகம். மெயிலைக் கொள்ளையடித்து ( Hackers ) சென்று கொண்டிருக்கிறார்கள். அலுவலகக் கடிதங்களில் இருக்கும் ரகசியத் தன்மை பெருமளவில் பாதிக்கப் பட்டிருப்பதை யாருமே மறுக்க மடியாது.
அப்படியானால் , கடு மந்தண ( Strictly Confidential )அலுவலகக் கடிதங்களை என்ன செய்யலாம் என்கிறாய்? மீண்டும் கையால் எழுத வேண்டும் என்கிறாயா என்று கேட்காதீர்கள். வேண்டாமே...... டைப்ரைட்டரைத் தூசித் தட்டினால் போதுமே.
மீண்டும் டைப்ரைட்டரா....... இதென்ன கம்ப்யுட்டருக்கு வந்த சோதனை என்கிறீர்களா?
தினசரியில் வந்த செய்தி இதைத் தான் சொல்கிறது. ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளில், மீண்டும் அலுவலகங்களில், confidential கடிதங்களை டைப் அடிக்க டைப்ரைட்டரைக் கொண்டு வரலாமா என்று யோசிக்கிறார்களாம் . அமெரிக்காவில் அந்தக் கஷ்டம் கூட இல்லை. அவர்கள் டைப்ரைட்டரை மொத்தமாக ஒழித்துக் கட்டவில்லையாம். ஒரு ஓரமாக கவர் போட்டு மூடி வைத்திருக்கிரர்களாம் .
தூசித் தட்டி உபயோகப்படுத்த ஆரம்பித்தது விடுவார்கள்.
எல்லாம் சரி..... இந்தியாவில் தான் டைப்ரைட்டர் மெஷின் தயாரிப்பே பரவலாக நின்று விட்டது போல் தெரிகிறதே. நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிறீர்களா? அலுவலகங்கள் இதைப் பற்றி யோசிக்கும் முன் .......வாருங்கள். OLX இல் பார்த்துக் கொண்டிருப்போம். பழைய மெஷின் கிடைத்தால் வாங்கி வைப்போம்.
யாரும் மெஷின் தயாரிப்பை ஆரம்பிப்பதற்கு முன், மெஷினை விற்று லாபம் பெறுவோம்..
" Old is Gold " ஹள்ளி மனேக்கு மட்டும் தானா என்ன ?டைப்ரைட்டருக்கும் தான்.
சட்டென்று நண்பர்," வருகிறீர்களா ஒரு காபி சாப்பிட்டுக் கொண்டே பேசலாம் " என்று சொல்லவும், எங்களுக்கும் காபி சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்ற
நன்பரிடமே " இங்கே நல்ல ஹோட்டல் ஒன்றிற்குப் போகலாமே " என்று சொல்லவும்.
நண்பர்," ஹள்ளி மனே " போகலாமா ? "
![]() |
picture courtesy--google. |
" ஏதோ ஒன்று போகலாம் வா " என் கணவர் சொல்ல
" ஏதோ ஒன்று இல்லை . மிகவும் அருமையாக இருக்கும். கிராமத்து செட்டப்பில் இருக்கும் " என்று ஹைப் கொடுத்தார் நண்பர்.
"அதென்ன கிராமத்து செட்டப் ? " நான் வினவ
"வாங்க மேடம், வந்துப் பாருங்க " என்று சொல்லிக் கொண்டே " ஹள்ளி மனே"க்குள் அழைத்துச் சென்றார்.
" அட... கிராமத்து வீடு போலிருக்கிறதே " என்று நான் சொல்லவும்,
"அதே தான் மேடம், "ஹள்ளி மனே " என்றால் கிராமத்து வீடு "என்றார்.
அழகிய வேலைப்பாடமைந்த தூண்கள் தாங்கிப் பிடிக்கும் கூரை, உடகார்ந்து சாப்பிட பென்ச் ,. வாழையிலையில் சாப்பாடு என்று கிராமத்து வீட்டை நினைவுப்படுத்தத் தவறவில்லை.
" எரடு கா...............பி..... " என்று சர்வர் கத்தி ஆர்டர் கொடுக்காதது தான் பாக்கி.
யோசித்துப் பார்த்தேன். கிராமம் விட்டு நகரம் என்று மக்கள் கூட்டம் கூட்டமாய் தாவிக்கொண்டிருக்க, நகருக்குள், கிராமத்தைக் கொண்டு வர ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள். ஓடு வேய்ந்தக் கூரை, அங்கங்கே கோலம், சுவற்றின் பெயிண்ட் கலர், எல்லாமே மனதைக் கொள்ளையடித்தது.
இவ்வளவு அருமையான இந்த ஹோட்டலில் , விலையும் சற்றே அதிகம் என்று சொன்னார் நண்பர். ஆனால் கூட்டம் அலை மோதுகிறது.
வேடிக்கை தான் இது. கிராமம் விட்டு ஆசை , ஆசையாய் நகரத்திற்குக் குடிப் பெயர்ந்து வந்து , மீண்டும் கிராமத்து விருந்தை அதிகப் பணம் கொடுத்து,உண்கிறோம். ஆக இதல்லாம் பழைய விஷயங்கள் என்று எதையும் நாம் ஒதுக்கி வைக்க முடியாது. எல்லோரும் மறந்திருக்கும் போது யாரோ ஒருவர் அதையே மீண்டும் புதுப் பொலிவோடு கொண்டு வந்து விடுகிறார். " Old is Gold " தானே.
நிறைய விஷயங்கள் இப்படித்தான் . சாதத்தை வடித்துக் கொண்டிருந்த நம்மை குக்கரில் சாதம் வைக்க சொன்னார்கள் . திரும்பவும் இப்பொழுது சாதம் வடிப்பது தான் நல்லது என்கிறார்கள்.
உணவு விஷயத்தில் தான் இப்படியென்றால், கம்ப்யுட்டர் படுத்தும் பாடு இருக்கிறதே........ மெயில் என்று ஒன்று வந்தாலும் வந்தது , அலுவலகக் கடிதங்கள், எல்லாமே மெயிலில் சென்றுக் கொண்டிருக்கின்றன.
என்ன வேகம்! என்னத் துல்லியம்! தவறுகள் இல்லாதக் கடிதங்கள் அசத்துகின்றன. மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்குக் கொள்ளைக் காரர்களும் மிக அதிகம். மெயிலைக் கொள்ளையடித்து ( Hackers ) சென்று கொண்டிருக்கிறார்கள். அலுவலகக் கடிதங்களில் இருக்கும் ரகசியத் தன்மை பெருமளவில் பாதிக்கப் பட்டிருப்பதை யாருமே மறுக்க மடியாது.
அப்படியானால் , கடு மந்தண ( Strictly Confidential )அலுவலகக் கடிதங்களை என்ன செய்யலாம் என்கிறாய்? மீண்டும் கையால் எழுத வேண்டும் என்கிறாயா என்று கேட்காதீர்கள். வேண்டாமே...... டைப்ரைட்டரைத் தூசித் தட்டினால் போதுமே.
மீண்டும் டைப்ரைட்டரா....... இதென்ன கம்ப்யுட்டருக்கு வந்த சோதனை என்கிறீர்களா?
தினசரியில் வந்த செய்தி இதைத் தான் சொல்கிறது. ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளில், மீண்டும் அலுவலகங்களில், confidential கடிதங்களை டைப் அடிக்க டைப்ரைட்டரைக் கொண்டு வரலாமா என்று யோசிக்கிறார்களாம் . அமெரிக்காவில் அந்தக் கஷ்டம் கூட இல்லை. அவர்கள் டைப்ரைட்டரை மொத்தமாக ஒழித்துக் கட்டவில்லையாம். ஒரு ஓரமாக கவர் போட்டு மூடி வைத்திருக்கிரர்களாம் .
தூசித் தட்டி உபயோகப்படுத்த ஆரம்பித்தது விடுவார்கள்.
எல்லாம் சரி..... இந்தியாவில் தான் டைப்ரைட்டர் மெஷின் தயாரிப்பே பரவலாக நின்று விட்டது போல் தெரிகிறதே. நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிறீர்களா? அலுவலகங்கள் இதைப் பற்றி யோசிக்கும் முன் .......வாருங்கள். OLX இல் பார்த்துக் கொண்டிருப்போம். பழைய மெஷின் கிடைத்தால் வாங்கி வைப்போம்.
யாரும் மெஷின் தயாரிப்பை ஆரம்பிப்பதற்கு முன், மெஷினை விற்று லாபம் பெறுவோம்..
" Old is Gold " ஹள்ளி மனேக்கு மட்டும் தானா என்ன ?டைப்ரைட்டருக்கும் தான்.